Tamil Nadu Board 8th Standard Science - Unit 17: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 17 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 17 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 17: தாவர உலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் 'சொலானம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?அ) சிற்றினம்
ஆ) பேரினம்
இ) வகுப்பு
ஈ) துறைகள்
விடைக்குறிப்பு:
ஆ) பேரினம்
2. புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு
அ) குளோரோஃபைசி
ஆ) பியோஃபைசி
இ) ரோடோஃபைசி
ஈ) சயனோஃபைசி
விடைக்குறிப்பு:
இ) ரோடோஃபைசி
3. கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
அ) ஆசில்லடோரியா
ஆ) நாஸ்டாக்
இ) வால்வாக்ஸ்
ஈ) குளோரெல்லா
விடைக்குறிப்பு:
இ) வால்வாக்ஸ்
4. உண்ணத் தகுந்த காளான்
அ) பாலிபோரஸ்
ஆ) அகாரிகஸ்
இ) பெனிசிலியம்
ஈ) அஸ்பர்ஜில்லஸ்
விடைக்குறிப்பு:
ஆ) அகாரிகஸ்
5. மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடைக்குறிப்பு:
இ) பிரையோஃபைட்டுகள்
6. முதலாவது நிலத் தாவரங்கள்
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடைக்குறிப்பு:
ஆ) டெரிடோஃபைட்டுகள்
7. நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடைக்குறிப்பு:
ஆ) டெரிடோஃபைட்டுகள்
8. இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு __________.
அ) 1970
ஆ) 1975
இ) 1978
ஈ) 1623
விடைக்குறிப்பு:
ஈ) 1623
9. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள், இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) பாசிகள்
ஆ) புஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடைக்குறிப்பு:
ஆ) பூஞ்சைகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. "வகைப்பாட்டியல்" என்ற சொல் __________ மொழியிலிருந்து பெறப்பட்டது.விடைக்குறிப்பு:
கிரேக்க
2. இரு சொற்பெயரிடு முறை முதன்முதலில் __________ என்பவரால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
விடைக்குறிப்பு:
காஸ்பர்டு பாகின்
3. 'ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை வெளியிட்டவர்கள் __________ மற்றும் __________.
விடைக்குறிப்பு:
பெந்தம் மற்றும் ஹீக்கர்
4. ஒரு விதையிலைத் தாவரங்கள் __________ விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
விடைக்குறிப்பு:
ஒரு
5. பழுப்பு பாசி __________ வகுப்பைச் சார்ந்தது.
விடைக்குறிப்பு:
ஃபேயோபைசியே
6. அகார் அகார் __________ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
விடைக்குறிப்பு:
ஜெலிடியம்
7. பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் __________ மற்றும் __________ ஆகும்.
விடைக்குறிப்பு:
கிளைக்கோஜன், எண்ணெய்
8. __________ முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
விடைக்குறிப்பு:
டெரிடோஃபைட்
9. __________ தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
விடைக்குறிப்பு:
பிரையோஃபைட்
10. __________ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
விடைக்குறிப்பு:
இரு விதையிலைத்
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.விடைக்குறிப்பு:
சரி
2. இரு சொல்பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
விடைக்குறிப்பு:
தவறு,
இரு சொல்பெயர் இரண்டு சொற்களைக் கொண்டிருக்கும்.
3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
விடைக்குறிப்பு:
சரி
4. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
விடைக்குறிப்பு:
சரி
5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.
விடைக்குறிப்பு:
தவறு,
பைனஸ் ஒரு திறந்த விதைத் தாவரம்.
6. பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
விடைக்குறிப்பு:
தவறு,
பிரையோஃபைட்டா தாவரங்கள் நில மற்றும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
7. இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளை கொண்டுள்ளன.
விடைக்குறிப்பு:
சரி
8. பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
விடைக்குறிப்பு:
சரி
9. பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோஃபைட் தாவர நிலை ஓங்கியது.
விடைக்குறிப்பு:
தவறு,
பிரையோஃபைட்டுகளில் கேமிட்டோஃபைட் தாவர நிலை ஓங்கியது.
10. டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
விடைக்குறிப்பு:
சரி
IV. பொருத்துக.
|
1
|
சையனோஃபைசி
|
பச்சைப் பாசி
|
|
2
|
குளோரோஃபைசி
|
நீலப் பச்சைப் பாசி
|
|
3
|
பேயோஃபைசி
|
சிவப்புப் பாசி
|
|
4
|
ரோடோஃபைசி
|
பழுப்புப் பாசி
|
|
1
|
சையனோஃபைசி
|
நீலப் பச்சைப் பாசி
|
|
2
|
குளோரோஃபைசி
|
பச்சைப் பாசி
|
|
3
|
பேயோஃபைசி
|
பழுப்புப் பாசி
|
|
4
|
ரோடோஃபைசி
|
சிவப்புப் பாசி
|
V. மிகச் சுருக்கமான விடையளி.
1. தாலஸ் - வரையறு.- பாசிகளின் தாவர உடலானது தாலஸ் என அழைக்கப்படுகிறது.
- தாவர உடலமானது வேர், தண்டு, இலை என்ற வேறுபாடற்றது.
2. இருசொற் பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஓர் உயிரினத்திற்கு இரண்டு சொற்களால் பெயரிடும் முறை இரு சொல் பெயரிடுதல் எனப்படும்.
- எ.கா: மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயர்.
3. இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
- விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டுள்ளன.
- மலர்கள் 4 அல்லது 5 அங்கங்களைக் கொண்டுள்ளன.
4. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை ஏன்?
- ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள், ஏனெனில் அவற்றின் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.
5. பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
- பெனிசிலின் (பெனிசிலியம் நொட்டேட்டம்) செபலோஸ்போரின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகள் பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
- ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகள் சர்க்கரைக் கழிவை நொதிக்கச் செய்து எத்தனாலாக மாற்றுகிறது.
VI. சுருக்கமான விடையளி.
- தாவரங்களின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
- பெந்தம் மற்றும் ஹீக்கரின் வகைப்பாட்டியல் முறை இதற்கு எடுத்துக்காட்டு.
- விதைத் தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு மற்றும் இனப்பெருக்கப் பண்பின் அடிப்படையில் இந்த முறை வகுக்கப்பட்டுள்ளது.
- பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்களது ஜெனிரா பிளாண்டாரம் என்ற புத்தகத்தில் மூன்று தொகுதிகளாக இதை விளக்கியுள்ளனர்.
2. பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
- சில நீல பச்சைப் பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன.
- எ.கா: நாஸ்டாக், அன்பீனா
- பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
- எ.கா: லேமினேரியா
- சில ஒரு செல் பாசிகள் மற்றும் நீலப் பச்சை பாசிகள் புரத உற்பத்திக்கு பயன்படுகின்றன.
- எ.கா: குளோரெல்லா, ஸ்பைருலினா
3. பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
|
பாசிகள்
|
பூஞ்சைகள்
|
|
தற்சார்பு உயிரிகள்
|
பிறச்சார்பு உயிரிகள்
|
|
நிறமிகள் உண்டு.
|
நிறமிகள் இல்லை.
|
|
சேமிப்புப் பொருள்: ஸ்டார்ச்
|
சேமிப்புப் பொருள்: கிளைக்கோஜன் மற்றும்
எண்ணெய்
|
|
சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைப்
கொண்டுள்ளது.
|
அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைக்
கொண்டுள்ளன.
|
|
எ.கா: சயனோ பாக்டீரியா
|
எ.கா: அகாரிகஸ்
|
4. பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளன? அவை யாவை?
- பிரையோஃபைட்டுகளில் மூன்று வகுப்புகள் உள்ளது. அவை,
- ஹெப்பாட்டிக்கே எ.கா: ரிக்ஸியா
- ஆந்தோசெரட்டே எ.கா: ஆந்தோசெரஸ)
- மாஸ்கள் எ.கா: பியூனேரியா
5. டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
- முதன் முதலில் தோன்றிய உண்மையான நிலத் தாவரங்கள்.
- கடத்துத் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளேயம் உள்ளன.
- எனவே டெரிடோஃபைட்டுகளை கடத்துத் திசுக்களை கொண்ட தாவரங்கள் எனப்படுகின்றன.
- இருமைய ஸ்போரோஃபைட் நிலை மற்றும் ஒரு மைய கேமிட்டோஃபைட் நிலை மாறி மாறி காணப்படுகிறது.
- ஸ்போர் முளைத்து புரோதாலஸ் எனப்படும் கேமிட்டோஃபைட் சந்ததியை உருவாக்குகிறது.
- இது தன்னிச்சையாகக் குறுகிய நாள் வாழக் கூடியது.
VII. விரிவான விடையளி.
|
ஒரு விதையிலை
தாவரம்
|
இரு விதையிலை
தாவரம்
|
|
விதைகள் ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
|
விதை இரண்டு விதையிலைகளைக் கொண்டுள்ளது.
|
|
சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும்.
|
ஆணிவேரத் தொகுப்பு காணப்படும்.
|
|
இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன்
காணப்படுகின்றன.
|
இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன்
காணப்படுகின்றன.
|
|
மலர்கள் மூன்று அடுக்கு உடையவை.
|
மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக்
கொண்டிருக்கும்.
|
|
மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின்
மூலம் நடைபெறும்.
|
மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள்
மூலம் நடைபெறும்.
|
|
எ.கா: புல்
|
எ.கா: அவரை
|
3. ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
|
ஜிம்னோஸ்பெர்ம்
|
ஆஞ்சியோஸ்பெர்ம்
|
|
திறந்த விதைத் தாவரங்கள்
|
மூடிய விதைத் தாவரங்கள்
|
|
சூற்பை இல்லாததால் கனிகள் உருவாவதில்லை.
|
கருவுறுதலுக்கும் பின் சூற்பை கனியாக மாறும்.
|
|
சைலம் டிரக்கிடுகளை மட்டும் கொண்டுள்ளது.
|
சைலமானது சைலக் குழாய்கள் டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்கள்
என நான்கு வகைச் செல்களைக் கொண்டுள்ளது.
|
|
துணை செல்கள் புளோயத்தில் கிடையாது. ஆனால்
உணவைக் கடத்த சல்லடை செல்கள் பயன்படுகிறது.
|
துணை செல்கள், சல்லடைக் குழாய்கள், புளோயம்
பாரன்கைமா, புளோயம் நார்கள் என நான்கு வகை செல்கள்
புளோயத்தில் உள்ளது
|
4. ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
- ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது காகிதத் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கு பயன்படுகிறது. எ.கா: பைனஸ்
- ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. எ.கா: செட்ரஸ், அகாதிஸ்
- பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் பிற வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
- பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படக்கூடியவை.
- எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
- அராவ்கேரியா பிட்வில்லி ஒரு அழகுத் தாவரம்.
5. மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விரிவக்கவும்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி):
- இலையை அரைத்துப் பெறப்படும் பசை தோலில் ஏற்படும் தீக்காயத்திற்கு மருந்தாக பயன்படுகிறது.
- இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.
- இதன் காயானது செரிமான குறைபாடுகளை சரி செய்கிறது.
- இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
- இதன் இலைகளும், கனிகளும், இருமல், சளி, மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோல் பகுதியில் தோன்றும் அழற்சியை குணப்படுத்துகின்றன. இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.







0 Comments:
Post a Comment