11th Economics - Book Back Answers - Unit 7 - Tamil Medium Guides


    Plus One / 11th Economics - Book Back Answers - Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard Economics - Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 7 : இந்திய பொருளாதாரம்

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1) கர்நாடகத்தின் முக்கியமான தங்கச் சுரங்கப் பகுதி________
    அ) கோலார்
    ஆ) இராமகிரி
    இ) அனந்தபூர்
    ஈ) கொச்சின்
    விடைகுறிப்பு:
    அ) கோலார்

    2) ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவதைக் குறிப்பிடுவது

    அ) GNP
    ஆ) GDP
    இ) NNP
    ஈ) தலாவருமானம்
    விடைகுறிப்பு:
    ஆ) GDP

    3) கீழ்க்காண்பவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
    அ) மெக்ஸிகோ
    ஆ) கானா
    இ) பிரான்ஸ்
    ஈ) ஸ்ரீலங்கா
    விடைகுறிப்பு:
    இ) பிரான்ஸ்

    4 ) வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்
    அ) நான்கு
    ஆ) ஏழு
    இ) ஐந்து
    ஈ) பத்து
    விடைகுறிப்பு:
    ஆ) ஏழு

    5. கலப்புப்பொருளாதாரம் என்பது....
    அ) தனியார் துறை மற்றும் வங்கிகள்
    ஆ) பொது, தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது
    இ) பொதுத்துறை, வங்கிகள்
    ஈ) பொதுத்துறைகள் மட்டும்.
    விடைகுறிப்பு:
    ஆ) பொது, தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

    6) இந்தியப் பொருளாதாரம்  ____________காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.
    அ) பொருளாதாரச் சமநிலையின்மை
    ஆ) கலப்புப் பொருளாதாரம்
    இ) நகரமயமாதல்
    ஈ) போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது
    விடைகுறிப்பு:
    அ) பொருளாதாரச் சமநிலையின்மை

    7) மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு
    அ) இட அமைப்பியல்
    ஆ) மக்கள் தொகையியல்
    இ) புவியியல்
    ஈ) தத்துவவியல்
    விடைகுறிப்பு:
    ஆ) மக்கள் தொகையியல்

    8) மக்கள் தொகையில் 1961ஆம் ஆண்டு எனப்படுகிறது.
    அ) சிறிய பிரிவினை ஆண்டு
    ஆ) மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
    இ) நகர மயமாதல் ஆண்டு
    ஈ)பெரும் பிரிவினை ஆண்டு
    விடைகுறிப்பு:
    ஆ) மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு

    9) எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?
    அ) 2000
    ஆ) 2001
    இ) 2005
    ஈ) 1997
    விடைகுறிப்பு:
    ஆ) 2001

    10) ஆயிரம் மக்களில் இறப்பவர் எண்ணிக்கை என்பது
    அ) கச்சா இறப்பு வீதம்
    ஆ) சுச்சா பிறப்பு வீதம்
    இ) கச்சா சிசு வீதம்
    ஈ) மகப்பேறு இறப்பு வீதம்
    விடைகுறிப்பு:
    அ) கச்சா இறப்பு வீதம்

    11) ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
    அ) கச்சா இறப்பு வீதம்
    ஆ) இறப்பு வீதம்
    இ) சோர்வு வீதம்
    ஈ) கச்சா பிறப்பு வீதம்
    விடைகுறிப்பு:
    ஈ) கச்சா பிறப்பு வீதம்

    12) மக்கள் தொகை அடர்த்தி என்பது
    அ) நிலத்தின் அளவு / மக்கள் தொகை
    ஆ) நிலத்தின் அளவு/ வேலைவாய்ப்பு
    இ) மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு
    ஈ) மக்கள் தொகை / வேலைவாய்ப்பு
    விடைகுறிப்பு:
    இ) மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

    13) தேசியவளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
    அ) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
    ஆ) ஜவஹர்லால் நேரு
    இ) டாக்டர் இராதாகிருஷ்ணன்
    ஈ) V.K.R.V
    விடைகுறிப்பு:
    ஆ) ஜவஹர்லால் நேரு

    14) காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
    அ) ஜவஹர்லால் நேரு
    ஆ) V.K.R.V.இராவ்
    இ) J.C குமரப்பா
    ஈ) A.K சென்
    விடைகுறிப்பு:
    இ) J.C குமரப்பா

    15) மக்களாட்சி சமதருமத்தைக் கொண்டுவந்தவர்
    அ) ஜவஹர்லால் நேரு
    ஆ) P.C மஹலனோபிஸ்
    இ) டாக்டர். இராஜேந்திரபிராத்
    ஈ) இந்திராகாந்தி
    விடைகுறிப்பு:
    அ) ஜவஹர்லால் நேரு

    16) B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்கிறார். இதன் அடிப்படையில்
    அ) குறைந்த நிலவுடைமையும் மற்றும் தீர்வுகளும்
    ஆ) இந்திய ரூபாயின் சிக்கல்கள்
    இ) சமதர்மப் பொருளாதாரம்
    (ஈ) மேற்கண்ட அனைத்தும்.
    விடைகுறிப்பு:
    ஆ) இந்திய ரூபாயின் சிக்கல்கள்

    17) இந்தக் கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
    அ) சமதருமச் சிந்தனை
    ஆ) ஒழுக்க நெறி அடிப்படை
    இ) கோபால கிருஷ்ண கோகலே
    ஈ) தாதாபாய் நௌரோஜி
    விடைகுறிப்பு:
    ஆ) ஒழுக்க நெறி அடிப்படை

    18) V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்
    அ) J.M.கீன்ஸ்
    ஆ) காலின் கிளார்க்
    இ) ஆடம் ஸ்மித்
    ஈ) ஆல்பிரட் மார்ஷல்
    விடைகுறிப்பு:
    அ) J.M.கீன்ஸ்

    19) பொருளாதாரத்திற்கான நோபல் அமர்த்தியாகுமார் சென் பெற்ற ஆண்டு பரிசை
    அ) 1998
    ஆ) 2000
    இ) 2008
    ஈ) 2010
    விடைகுறிப்பு:
    அ) 1998

    20) திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது.
    அ) செல்வம்
    ஆ) வறுமை சமுதாயத்தின் சாபம்
    இ) வேளாண்மை
    ஈ) மேற்காண் அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) மேற்காண் அனைத்தும்

    II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி

    21. பொருளாதார வளர்ச்சியின் பொருள் தருக.
    • GDP யை பொருத்து முன்னேறாத பொருளாதாரம் முன்னேறிய நிலையை அடைதல்.
    • நாட்டு வருமானத்தில் தனி நபரது பங்கு அதிகரித்தல்.
    • மக்கள் தொகையின் தலா உற்பத்தியின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சி.

    22. முன்னேறிய பொருளாதாரத்தின் இரண்டு இயல்புகள் யாவை?
    • உயர்ந்த நாட்டு வருமான வளர்ச்சி.
    • உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
    • உயர்ந்த தனி நபர் வருமானம்.
    • சீறிய பொருளாதார வளர்ச்சி
    • உயர்ந்த தொழில் நுட்பம். அதிக நுகர்ச்சி நிலை.

    23. இயற்கை வளங்களை பற்றி குறிப்பு வரைக.
    • ஒரு நாட்டின் இயற்கையில் இருந்து பெறப்படும் வளங்கள்.
    • உதாரணம் : காடு, நீர், மண், கனிம வளங்கள், ஆற்றல் சக்திகள்.

    24. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினை கூறுக.
    • இந்தியா கலப்பு பொருளாதார முறையினை பின்பற்றுகிறது.
    • அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதே கலப்பு பொருளாதாரம்.

    25. புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் பொருள் தருக.
    • மீண்டும் உருவாக்க முடியாத, நிலைத்திருக்க முடியாத ஆற்றல் மூலங்கள்.
    • உதாரணம்: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு.

    26. தொழில்நுட்ப தெரிவு பற்றி சென் கூறுவது யாது?
    • உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் மூலதனச் செறிவு நுட்ப முறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் - சென்

    27. குறைந்த தலா வருமானம் இருக்கக் காரண V.K.R.V. ராவ் கூறுவதை பட்டியலிடுக.
    • முறையற்ற நிலவுடைமை முறை. நிலம் துண்டாடப்படுதல். 
    • குறைவான நீர்பாசன வசதி.
    • வேளாண்மையில் அதிக மக்கள் தொகை அழுத்தம். 
    • முதலீடு இன்மை.
    • பேரளவு தொழில்துறை இன்மை. 
    • நாணயத்தில் சுயாட்சி கொள்கை இன்மை.
    • பணம் பற்றிய கருத்துகளில் தங்கம் உடைமையாக் கொள்ளப்படுவதை ஊக்குவித்தது.

    III. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி

    28. பொருளாதார முன்னேற்றம் - வரையறு.
    பொருளாதார முன்னேற்றம்:
    • ஒரு நாட்டின் GDP அதிகரித்தல், அந்த நாட்டு மக்களின் நல வாழ்வையும், உயர்வான வாழ்க்கை தரத்தையும் உள்ளடக்கியது.
    • தலா வருமானத்தை பொருத்து ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், நாட்டின் நலம் அதிகரிப்பது. பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் நிகழும் தொடர்ச்சியற்ற மற்றும் தன்னிச்சையான மாற்றங்களை குறிக்கும்.
    • உற்பத்தி அதிகரிப்பதோடு உற்பத்தியாகும் பொருட்களின் வகைகளும் மாறுவதை காட்டுவதே பொருளாதார முன்னேற்றம்.

    29. வேளாண்மைப் பொருளாதாரம் பற்றி அம்பேத்கரின்  பொருளாதாரக் கருத்துகளைக் கூறுக?
    வேளாண்மை பொருளாதாரம்: (அம்பேத்கர்)
    • 1918 இல் இந்தியாவில் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள் என்ற கட்டுரையை அம்பேத்கர் எழுதினார்.
    • நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றம் நிலவுடைமை விரிவாக்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார்.
    • இது ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வத்தை போல அமைந்தது.

    30. கிராம சர்வோதயா - சிறு குறிப்பு வரைக.
    • உண்மையாக இந்தியா வாழ்வது நகரங்களிலோ புற நகரங்களிலோ இல்லை கிராமங்களில் காந்தியடிகள்
    • கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும்.
     
    31. இந்திய திட்டமிடுதலில் நேருவின் அணுகுமுறையை எழுதுக.
    இந்திய திட்டமிடுதலில் நேருவின் அணுகுமுறைகள்:
    • திட்டமிடுதலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் நேரு.
    • ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு திட்டமடுதல் அவசியம்.
    • திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் ஆகியவற்றை சிறந்த வழியில் பயன்படுத்துவதாகும்.
    • திட்டமிடுதல் மூலம் ஒரு நாடு தன்னைதானே வளர்ச்சியடையச் செய்து தற்சார்பினை அடைகிறது.

    32. பெருக்கி எனும் கருத்தைப் பற்றி V.K.R.V. இராவின் பங்களிப்பை எழுதுக.
    • முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம். மற்றும் பெருக்கி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்ற நூலை 1952 ல் ராவ் எழுதினார்.
    • இந்த நூல் பேரியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியது.
    • ராவ் பொருளாதாரத்தில் கீன்ஸின் அடிகளை பின்பற்றினார்.

    33. நலப்பொருளாதாரம் பற்றி அமர்த்தியா சென்னின் கருத்துகளை எழுதுக.
    • இரக்கத்திற்கு உரியவர்களாக ஏழைகளை பார்க்காமல் மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும்.
    • ஏழைகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
    • ஏழைகள் அதிகார உரிமை கொண்டவர்களாக திகழ வேண்டும்.
    • கல்வி உடல் நலம், ஊட்டச்சத்து பாலின சமநிலை, துன்ப காலங்களில் பாதுகாப்பு, வேலை மாற்றப்பட வேண்டும். வாய்ப்பு போன்றவை உரிமைகளாக
    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.
    • அடிப்படை கச்சாப் பொருட்களை மக்களின் நலனுக்காக மாற்றி அமைக்க வேண்டும்.

    34. சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.
    சமூக கட்டமைப்புகள்:
    • மனித வளங்களின் திறமையை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாக துணை செய்யும் அமைப்புகளே சமூக கட்டமைப்புகள்.
    • உதாரணம்: பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொது மற்றும் குடிமை வசதிகள்.
    • இவை மனித வளங்களின் திறமையையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது.
    • குறைவான சமூக கட்டமைப்பு இந்திய பணியாளர்களின் உற்பத்தி திறன் குறைய காரணமக உள்ளது.
    • மனித வள மேம்பாட்டுத்துறை நம் நாட்டின் கல்விக் கொள்கையையும், திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    IV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையள

    35. இந்திய பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விளக்குக.
    இந்திய பொருளாதாரத்தின் வலுவான அம்சங்கள்:
    இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்:
    • இந்தியா கலப்பு பொருளாதார முறையினை பின்பற்றுகிறது.
    • அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதே கலப்பு பொருளாதாரம்.
    வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:
    • இந்தியாவில் சுமார் 60% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை வாழ்வாதரமாக கொண்டுள்ளனர்.
    • இந்தியாவில் 17% GDP வேளாண்மை துறையில் இருந்து கிடைக்கிறது.
    வளர்ந்து வரும் சந்தை:
    • இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறி இருக்கிறது.
    • இந்தியா குறைந்த முதலீட்டில் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களை கொண்டுள்ளது.
    வளர்ந்துவரும் பொருளாதாரம்:
    • லக நாடுகளின் GDP யில் இந்தியா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
    • வாங்கும் சக்தியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
    • விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக G 20 நாடுகளில் இந்தியா உள்ளது.
    வேகமாக வளரும் பணிகள் துறை:
    • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணிகள் துறையின் பங்கு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது.
    மக்கள் தொகை பகுப்பு:
    • இந்திய மனித வளம் அதிக அளவு இளைஞர்களை பெற்றுள்ளது.
    • இந்திய இளைஞர்களின் திறமையினால் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது.
    நகரப் பகுதிகளின் விரைவான வளர்ச்சி:
    • இந்தியாவின் மேம்பட்ட போக்குவரத்து, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரபகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றன.
    நிலையான பேரளவு பொருளாதாரம்:
    • உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
    பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி:
    • பொருளாதார வளர்ச்சியினால் மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை வளர்ச்சியடைந்துள்ளது.
    • உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தொழில்கள் வளர்ச்சியடைந்துள்ளன.
    வேகமாக வளரும் பொருளாதாரம்:
    • இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
    • GDP யின் வேகமான வளர்ச்சி வேகமாக வளரும் நாடுகளுக்கிடையே இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை நிருபிக்கிறது.

    36. இந்திய கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
    இந்திய கனிம வளங்கள்:
    இரும்புத்தாது:
    • ஹேமடைட், மேக்னடைட் இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கிறது.
    • ஹேமடைட் அதிகமாக கிடைக்கும் இடங்கள் சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா, கர்நாடகா.மேக்னடைட் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையில் அதிகம் கிடைக்கிறது.
    நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
    • நிலக்கரி உற்பத்தியில் உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக அளவில் நிலக்கரி கிடைக்கிறது.
    • தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி நெய்வேலியில் அதிகமாக கிடைக்கிறது.
    அலுமியத்தாது (பாக்சைட்):
    • பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது.
    • பாக்சைட் ஆந்திர பிரதேசம், ஒடிசாவின் கிழக்கு கடற்கரையிலும் செறிந்து காணப்படுகிறது.
    மைக்கா:
    • மின் தடுப்பானக பயன்படும் மைக்கா தாள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது.
    • பெக்காமைட் ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது.
    தங்கம்: 
    • இந்தியாவில் குறைந்த அளவே தங்கம் கிடைக்கிறது.
    • இந்தியாவின் மூன்று முக்கிய தங்க சுரங்கங்கள் 
    • கோலார் தங்கவயல் (கோலார் -கர்நாடகா) 
    • ஹட்டி தங்க வயல் (ரெய்சூர் - கர்நாடகா) 
    • ராம்கிரி தங்கவயல் (அனந்தபூர் ஆந்திரபிரதேசம்).
    கச்சா எண்ணை:
    • இந்தியாவில் அஸாம், மற்றும் குஜராத்தின் பல இடங்களில் கச்சா எண்ணை எடுக்கப்படுகிறது.
    • அஸாமில் கச்சா எண்ணை கிடைக்கும் பகுதிகள் டிக்பாய், பாடர்பூர், நாகர்காட்டிகா, காசிம்பூர், பள்ளியரியா. குஜராத்தில் கச்சா எண்ணை கிடைக்கும் பகுதிகள் காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர், காலோல்.
    வைரம்:
    • மத்திய பிரதேசத்தில் பன்னாவிலும் ஆந்திர பிரதேசத்தில் ராமல்ல கோட்டா, நாராயணபேட், ராய்ப்பூர், இம்பர்லி மற்றும் கிருஷ்ணா நதி படுகையிலும் வைரம் கிடைக்கிறது. ஒடிஷாவில் நியுபடா, கர்நாடகாவில் ரெய்சூர், சட்டிஸ்கரில் பாஸ்டர் பகுதிகளில் வைரம் கிடைக்கிறது.

    37. பொருளாதார முன்னேற்ற கருத்துகளில் ஜவாஹலால் நேருவின் பங்கை வெளிக்கொணர்க.
    நேருவின் பொருளாதார கருத்துகள்:
    ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை:
    • ஜனநாயகத்தை உறுதியாக நம்பியவர் நெரு.
    • பேச்சுரிமை, குடிமக்கள் உரிமை, வாக்குரிமை, சட்டத்தின் வழி ஆட்சி ஆகியவற்றை நேரு நம்மினார்.
    • மதசார்பின்மை இந்தியாவுக்கு நேரு அணித்த சிறப்பான பங்களிப்பு.
    திட்டமிடுதல்:
    • திட்டமிடுதலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் நேரு.
    • ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு திட்டமிடுதல் அவசியம்.
    • திட்டமிடுதலின் சாரம் என்பது என்பது மனித சக்தி வளங்கள், பணம் ஆகியவற்றை சிறந்த வழியில் பயன்படுத்துவதை குறிக்கும்.
    • அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தொழில்மயமாதல் மூலம் ஒரு நாடு தன்னை தானே வளர்ச்சியடைய செய்து தற்சார்பினை அடையும்.
    • இந்திய தொழில்நுட்ப கழகம் நேரு பிரதமாராக இருந்த போது தொடங்கப்பட்டது.
    • அறிவியல் மனப்பான்மையை வலியுறுத்தினார்.
    ஜனநாய சமதர்மம்:
    • இந்தியாவிற்கு நேருவின் மிகப் பெரிய பங்களிப்பு சமதர்மம்,
    • நேரு இந்தியாவை சமதர்ம சமூகமாக கட்டமைக்க விரும்பினார்.
    • நேருவின் சமதர்மம் என்பது ஜனநாய சமதர்மமாகும்

    38. காந்திய பொருளாதார கருத்துகளை விவரி.
    காந்திய பொருளாதார கருத்துகள்:
    கிராம குடியரசு:
    • உண்மையாக இந்தியா வாழ்வது நகரங்களிலோ புற நகரங்களிலோ இல்லை கிராமங்களில் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும்.
    மக்கள் தொகை:
    • காந்தி செயற்கையான குடும்ப கட்டுப்பாடு முறைகளை எதிர்த்தார்.
    • மக்கள் தொகையை கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு, பிரம்மச்சாரியமே சிறந்தது என்று கூறினார்.
    இயந்திரங்கள்: 
    • இயந்திர மயமாதலை எதிர்த்த காந்தி அதன் தீமைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும் எனக் கூறினார்.
    • காந்தி இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று வர்ணித்தார்.
    • இயந்திரங்களின் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
    உணவுப் பிரச்சனை: 
    • உணவுப் பொருட்களின் மீதான எந்த ஒரு கட்டுப்பாட்டையும் காந்தி எதிர்த்தார். 
    • அவை செயற்கை கட்டுப்பாடுகளை உருவாக்கும் என எச்சரித்தார்.
    அறக்கட்டளை கோட்பாடு: 
    • தற்போதைய முதலாளித்துவ முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை
    • உருவாக்குவதே காந்தியின் அறக்கட்டளை கோட்பாடாகும்.
    மது விலக்கு: 
    • முழுமையான மதுவிலக்கை காந்தி வலியுறுத்தினார்.
    • மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்யாது மாறாக நோயை தரும். 
    • இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் - காந்தி.
    தொழில்மயமாதல்:
    • தொழில்மயமாதல் மனித இனத்தின் சாபக்கேடு, நாட்டின் திறன்களை முழுவதும் சுரண்டுவதை தொழில்மயம் சார்ந்துள்ளது என கருதினார்.
    உழைப்பு: 
    • மனிதன் தனக்குத் தேவையான உணவை தன் உழைப்பால் பெறவேண்டும்.
    • மனித உழைப்பு என்பது உடல் உழைப்பு என்பது காந்தியின் கருத்து.
    உற்பத்தி பரவலாக்கம்:
    • உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும், அநேக இடங்களில் சிறிய அளவில் உற்பத்தி நடைபெற வேண்டும்.
    • வீடுகளில் உற்பத்தி நடைபெற வேண்டும் என்பது காந்தியின் கருத்து.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive