8th Science - Book Back Answers - Unit 11 - Tamil Medium Guides



 


    8th - Science - Book Back Answers - Unit 11 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard  Science - Unit 11: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 11 – from the Tamil Nadu State Board 8th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 11 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 11: காற்று 

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
    அ) முழுமையாக எரியும் வாயு
    ஆ) பகுதியளவு எரியும் வாயு
    இ) எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
    ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
    விடைக்குறிப்பு: 
    ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

    2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் __________ உள்ளது.
    அ) காற்று
    ஆ) ஆக்சிஜன்
    இ) கார்பன் டை ஆக்சைடு
    ஈ) நைட்ரஜன்
    விடைக்குறிப்பு: 
    இ) கார்பன் டை ஆக்சைடு

    3. சால்வே முறை __________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
    அ) சுண்ணாம்பு நீர்
    ஆ) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
    இ) வாலை வடிநீர்
    ஈ) சோடியம் கார்பனேட்
    விடைக்குறிப்பு: 
    ஈ) சோடியம் கார்பனேட்

    4. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து __________ மாற்றுகிறது.
    அ) நீல லிட்மசை சிவப்பாக
    ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக
    இ) நீல லிட்மசை மஞ்சளாக
    ஈ) லிட்மசுடன் வினை புரிவதில்லை 
    விடைக்குறிப்பு: 
    அ) நீல லிட்மசை சிவப்பாக

    5. அசோட் எனப்படுவது எது?
    அ) ஆக்சிஜன்
    ஆ) நைட்ரஜன்
    இ) சல்பர்
    ஈ) கார்பன் டை ஆக்சைடு
    விடைக்குறிப்பு: 
    ஆ) நைட்ரஜன்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. __________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
    விடைக்குறிப்பு: 

    ஆக்சிஜன்

    2. நைட்ரஜன் காற்றை விட __________.
    விடைக்குறிப்பு:

     இலேசானது

    3. __________ உரமாகப் பயன்படுகிறது.
    விடைக்குறிப்பு: 

    அம்மோனியா

    4. உலர்பனி __________ ஆகப் பயன்படுகிறது.
    விடைக்குறிப்பு: 

    குளிரூட்டி

    5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு __________ எனப்படும்.
    விடைக்குறிப்பு: 

    துருப்பிடித்தல்

    III.  பொருத்துக.   

    1
    நைட்ரஜன்
    உயிரினங்களின் சுவாசித்தல்
    2
    ஆக்சிஜன்
    உரம்
    3
    கார்பன் டைஆக்சைடு
    குளிர்பதனப் பெட்டி
    4
    உலர்பனி
    தீயணைப்பான்
    விடைக்குறிப்பு:
    1
    நைட்ரஜன்
    உரம்
    2
    ஆக்சிஜன்
    உயிரினங்களின் சுவாசித்தல்
    3
    கார்பன் டைஆக்சைடு
    தீயணைப்பான்
    4
    உலர்பனி
    குளிர்பதனப் பெட்டி
     

    IV. சுருக்கமாக விடையளி.

    1. ஆக்சிஜனின் இயற்பியல் பண்புகள் சிலவற்றை எழுதுக.
    • ஆக்ஸிஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.
    • வெப்பம் மற்றும் மின்சாரத்தை எளிதில் கடத்தாது.
    • காற்றை விட கனமானது.
    • ஆக்ஸிஜன் குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும்.
    • இது எரிதலுக்கு துணைபுரிகிறது.
    • அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது திரவமாகிறது.

    3. நைட்ரஜனின் பயன்கள் யாவை?
    • திரவ நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் குளிரூட்டியாக பயன்படுகிறது.
    • சில வேதிவினைகள் நிகழத் தேவையான மந்தத் தன்மை நிலவச் செய்கிறது.
    • அம்மோனியா, உரங்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் ஹேபர் முறையில் தயாரிக்க பயன்படுகிறது.
    • வாகனங்களின் டயர்களில் நிரப்பப் பயன்படுகிறது.
    • வெப்பநிலைமானிகளிலுள்ள பாதரசம் ஆவியாகாமல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுகிறது.
    • பலவிதமான வெடி பொருள்கள் TNT, சைட்ரோகிளிசரின் மற்றும் துப்பாக்கி வெடி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
    • உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதலில் பயன்படுகிறது.

    4. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.
    • அலோகங்களான ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து அவற்றின் நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.
    • 3H2+N2      2NH3
    • ஹைட்ரஜன் நைட்ரஜன் அம்மோனியா

    5. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
    • வளிமண்டலத்தில் காற்று மாசுபடுத்திகளின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதாலும், பசுமை இல்லா விளைவு அதிகமாகி புவியின் வாயு மண்டல வெப்பநிலை சராசரியாக உயர்வதாலும் பூமியின வெப்பநிலை உயர்கிறது. 
    • இதனை உலக வெப்பமயமாதல் என்கின்றோம்.

    6. உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.
    • திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படும்.
    • இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாக பயன்படுகிறது.
    • அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றத்தினை உருவாக்க பயன்படுகிறது. 
    • இப்பண்பு மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக் காட்சிகளிலும் பயன்படுகிறது.

    V. விரிவாக விடையளி.

    1. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டைஆக்சைடு வாயுவைச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.
    • சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்போது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால் கரைசல் பால் போல் மாறுகிறது.
    • Ca(OH), + CO2 → CaCO3 + H₂O
    • அதிகளவு கார்பன் டை ஆக்சைடை சுண்ணாம்பு நீரில் செலுத்தும் போது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது.
    • இதற்கு காரணம் கரையக் கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் Ca(HCO3)2 உருவாவதே ஆகும்.
     
    2. கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும் போது உருவாகும் பொருட்களை எழுதுக.
    அ) கார்பன்             ஆ) சல்பர்                இ) பாஸ்பரஸ்
    ஈ) மெக்னீசியம்    உ) இரும்பு           ஊ) சோடியம்
     
    விளைபொருள்கள்
    அ) கார்பன்
    கார்பன் டை ஆக்சைடு (CO2)
    ஆ) சல்பர்
    சல்பர் டை ஆக்சைடு (SO2)
    இ) பாஸ்பரஸ்
    பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு (PO3)
    ஈ) மெக்னீசியம்
    மெக்னீசியம் ஆக்சைடு (MgO)
    உ) இரும்பு
    இரும்பு ஆக்சைடு (Fe3O4)
    ஊ) சோடியம்
    சோடியம் ஆக்சைடு (Na2O)
     
    3. கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டைஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?
    அ) பொட்டாசியம்
    ஆ) சுண்ணாம்பு நீர்
    இ) சோடியம் ஹைட்ராக்சைடு
    • அ) 4K + 3CO2 → 2K2CO3 + C
    • பொட்டாசியம் + கார்பன் டை ஆக்ஸைடு  பொட்டாசியம் கார்பனேட் + கார்பன்
    • ஆ) Ca(OH)2 + CO2  CaCO3 + H2O
    • கால்சியம் ஹைட்ராக்ஸைடு + கார்பன் டை ஆக்ஸைடு  கால்சியம் கார்பனேட் + நீர்
    • இ) 2NaOH + CO2  Na2CO3 + H2O
    • சோடியம் ஹைட்ராக்ஸைடு + கார்பன் டை ஆக்ஸைடு → சோடியம் கார்பனேட் + நீர்
     
     
    4. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?
    அமில மழையின் விளைவுகள்:
    • மனிதர்களின் கண்களிலும், தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
    • விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.
    • மண்ணின் வளத்தை மாற்றுவதோடு தாவரங்களையும் நீர்வாழ் உயிரனங்களையும் அளிக்கிறது.
    • கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்கு காரணமாகிறது.
    • அமில மழையை தடுக்கும் வழிமுறைகள்:
    • பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல். அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் (CNG) பயன்படுத்துதல்.
    • தொழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.

    VI.  உயர் சிந்தனை வினாக்கள்.

    1. கோடைக் காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும் பொழுது அவை வெடிப்பது ஏன்?
    • கோடைக் காலங்களில் வெப்பநிலை அதிகம் நிலவும், எனவே அதிக வெப்பத்தால் கார்பன்டை ஆக்ஸைடு வாயு அதிகமாக கரைசலை விட்டு வெளியேறும் பொழுது அழுத்தமும் அதிகமாகும்.
    • எனவே கோடைக் காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும் பொழுது அதிக அழுத்தத்தின் காரணமாக அவை வெடிக்கின்றன.

    2. இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன?
    • இரவு நேரங்களில் மரங்களின் இலைகள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகின்றன.
    • மரங்களின் அடியில் படுத்து உறங்கும் போது சுவாசிக்க தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் சுவாச கோளாறு பிரச்சனை ஏற்படலாம்.

    3. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?
    • மீனின் வாய் வழியே நீர் நுழைந்து செவுள்கள் வழியாக வெளியேறும் போது, மீன்களின் செவுள்கள் வழியே நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு நீரினுள் சுவாசிக்கின்றன.
    • மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன், காற்றில் உள்ள ஆக்சிஜனை மீனின் செவுள்களால் பிரிக்க இயலாது.எனவே மீன் இறந்துவிடுகின்றன.

    4. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?
    • விண்வெளி வீரர்கள் செயற்கையாக சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை, ஆக்சிஜன் உருளைகளில் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். 
    • அதன் வழியாக சுவாசிக்கின்றனர்.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive