Tamil Nadu Board 8th Standard Science - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2: விசையும் அழுத்தமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) நின்றுவிடும்
ஆ) அதிவேகத்தில் இயங்கும்
இ) குறைந்த வேகத்தில் இயங்கும்
ஈ) வேறுதிசையில் இயங்கும்
விடைக்குறிப்பு:
இ) குறைந்த வேகத்தில் இயங்கும்
2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
அ) திரவத்தின் அடர்த்தி
ஆ) திரவத்தம்ப உயரம்
இ) அ மற்றும் ஆ
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடைக்குறிப்பு:
இ) அ மற்றும் ஆ
3. அழுத்தத்தின் அலகு
அ) பாஸ்கல்
ஆ) NM2
இ) பாய்ஸ்
ஈ) அ மற்றும் ஆ
விடைக்குறிப்பு:
ஈ) அ மற்றும் ஆ
4. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
அ) 76செ.மீ பாதரசத் தம்பம்
ஆ) 760செ.மீ பாதரசத் தம்பம்
இ) 176செ.மீ பாதரசத் தம்பம்
ஈ) 7.6செ.மீ பாதரசத் தம்பம்
விடைக்குறிப்பு:
அ) 76செ.மீ பாதரசத் தம்பம்
5. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
அ) நீரியல் உயர்த்தி
ஆ) தடைசெலுத்தி (பிரேக்)
இ) அழுத்தப்பட்ட பொதி
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடைக்குறிப்பு:
ஈ) மேற்கண்ட அனைத்தும்
6. கீழ்க்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
அ) கிரீஸ்
ஆ) நீர்
இ) தேங்காய் எண்ணெய்
ஈ) நெய்
விடைக்குறிப்பு:
ஈ) நெய்
7. பாகுநிலையின் அலகு
அ) Nm²
ஆ) பாய்ஸ்
இ) kgms-1
ஈ) அலகு இல்லை
விடைக்குறிப்பு:
ஆ) பாய்ஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் __________.விடைக்குறிப்பு:
அதிகரிக்கும்
2. நீரியல் உயர்த்தி __________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
விடைக்குறிப்பு:
3. தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம் __________ என்ற திரவப்பண்பே ஆகும்.
விடைக்குறிப்பு:
பரப்பு இழுவிசை
4. எளிய பாதரசமானி முதன் முதலில் __________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடைக்குறிப்பு:
டாரிசெல்லி
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. கொடுக்கப்பட்ட பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.விடைக்குறிப்பு:
சரி
2. இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வுநிலைக்கு வருகிறது.
விடைக்குறிப்பு:
சரி
3. ஒரு பொருளின் எடை மிதப்பு விசையைவிட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.
விடைக்குறிப்பு:
சரி
4. ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது செயல்படும்100000 நியூட்டன் விசைக்குச் சமம்.
விடைக்குறிப்பு:
சரி
5. உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட சற்று அதிகமாக இருக்கும்
விடைக்குறிப்பு:
தவறு, உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட சற்று குறைவாக இருக்கும்.
5. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்.
விடைக்குறிப்பு:
தவறு, ஆற்றல் இழப்பிற்கு உராய்வும் ஒரு காரணம்
7. ஆழம் குறையும் போது திரவ அழுத்தம் குறையும்.
விடைக்குறிப்பு:
சரி
8. பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது.
விடைக்குறிப்பு:
தவறு, பாகுநிலை திரவத்தின் உராய்வு விசையைச் சார்ந்தது.
IV. பொருத்துக.
அ)
|
1
|
நிலை உராய்வு
|
பாகுநிலை
|
|
2
|
இயக்க உராய்வு
|
குறைந்த உராய்வு
|
|
3
|
உருளும் உராய்வு
|
பொருள்கள்
இயக்கத்தில் உள்ளன
|
|
4
|
திரவ
அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு
|
பொருள்கள்
நழுவுகின்றன
|
|
5
|
நழுவு உராய்வு
|
பொருள்கள்
ஓய்வுநிலையில் உள்ளன
|
|
1
|
நிலை உராய்வு
|
பொருள்கள்
ஓய்வுநிலையில் உள்ளன
|
|
2
|
இயக்க உராய்வு
|
பொருள்கள்
இயக்கத்தில் உள்ளன
|
|
3
|
உருளும் உராய்வு
|
குறைந்த உராய்வு
|
|
4
|
திரவ
அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு
|
பாகுநிலை
|
|
5
|
நழுவு உராய்வு
|
பொருள்கள்
நழுவுகின்றன
|
|
1
|
பாதரசமானி
|
உராய்வை நீக்கும்
|
|
2
|
தொடுபரப்பை
அதிகரித்தல்
|
வளிமண்டல அழுத்தம்
|
|
3
|
தொடுபரப்பை
குறைத்தல்
|
உராய்விற்கான
காரணம்
|
|
4
|
உயவுப் பொருள்கள்
|
உராய்வை
அதிகரிக்கும்
|
|
5
|
ஒழுங்கற்ற பரப்பு
|
உராய்வை குறைக்கும்
|
|
1
|
பாதரசமானி
|
வளிமண்டல அழுத்தம்
|
|
2
|
தொடுபரப்பை
அதிகரித்தல்
|
உராய்வை
அதிகரிக்கும்
|
|
3
|
தொடுபரப்பை
குறைத்தல்
|
உராய்வை குறைக்கும்
|
|
4
|
உயவுப் பொருள்கள்
|
உராய்வை நீக்கும்
|
|
5
|
ஒழுங்கற்ற பரப்பு
|
உராய்விற்கான
காரணம்
|
V. ஒப்பிட்டு விடை தருக.
1. நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு: நிலை உராய்வு: பந்து தாங்கிகள்: __________ உராய்வு.விடைக்குறிப்பு:
உருளும்
2. கீழ்நோக்கிய விசை: எடை :: திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : __________.
விடைக்குறிப்பு:
மிதத்தல்
VI. கணக்குகள்.
விடைக்குறிப்பு:
கல்லின் எடை = 500N
பரப்பு = 25செ.மீ2
அழுத்தம் = =
அழுத்தம் = 20Nm-2 (அல்லது) பாஸ்கல்
VII. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்: கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
விடைக்குறிப்பு:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல.
2. கூற்று: தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
விடைக்குறிப்பு:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல.
காரணம்: நீர்ச்சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
விடைக்குறிப்பு:
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
VIII. மிகச்சுருக்கமான விடையளி.
1. விசை, ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் செயலுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.விடைக்குறிப்பு:
- மிதிவண்டியின் இருக்கையில் அமரும் போது அதன் வடிவம் மாற்றமடையும்.
- ரப்பரை பந்தை அழுத்தும் பொழுது அதன் வடிவம் மாற்றமடையும்.
2. ஒரு பொருளின் நிலைப்புத் தன்மையை விசை மாற்றுகிறது என்பதற்கு இரு உதாரணங்கள் தருக.
விடைக்குறிப்பு:
அ) கதவைத் திறப்பதற்காக அதைத் தள்ளுதல்
ஆ) ஓய்வுநிலையில் உள்ள ஊஞ்சலை ஆட்டுதல்.
3. மரப்பலகையில் இரும்பு ஆணி ஒன்று சுத்தி கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொடும்போது என்ன உணர்கிறாய்? ஏன் அவ்வாறு நிகழ்கிறது?
விடைக்குறிப்பு:
- வெப்பத்தை உணர்கிறேன்.
- காரணம்: ஆணிக்கும் சுத்தியலுக்கும் இடையே உள்ள உராய்வு விசை ஏற்படுவதால் வெப்பம் உணரப்படுகிறது.
4 ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருள்களின் புறப்பரப்புகளுக்கு இடையே உராய்வு எவ்வாறு உருவாகிறது?
விடைக்குறிப்பு:
- ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக உராய்வு விசை உருவாகிறது.
5. திரவ அழுத்தத்தை அளவிட உதவும் இரு கருவிகளின் பெயர்களைக் கூறுக.
விடைக்குறிப்பு:
அ. பாரோ மீட்டர்
ஆ. மானோ மீட்டர்
6. ஒரு வளிமண்டல அழுத்தம் வரையறு.
விடைக்குறிப்பு:
- ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) என்பது பாதரசமானியில் உள்ள 76 செ.மீ உயரமுடைய பாதரசத்தால் செலுத்தப்படும் அழுத்தம் ஆகும்.
-
மதிப்பு = 1.01 x 105Nm-2
7. அதிக எடையைச் சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்கப்படுவது ஏன்?
விடைக்குறிப்பு:
- அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் தொடுபரப்பை அதிகரிப்பதற்கும் அதிக எடையைச் சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்கப்படுகிறது.
8. பரப்பு இழுவிசை தாவரங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
விடைக்குறிப்பு:
- சைலம் எனப்படும் மிக நுண்ணிய குழாய்கள் காணப்படுகின்றன.
- தாவர வேர்களின் வழியாக உறிஞ்சப்படும் நீரானது நுண்புழை ஏற்றம் காரணமாக நீர் மேல் நோக்கிச் செல்கின்றன.
- இதற்கு நீரின் பரப்பு இழுவிசையே காரணமாக அமைகிறது.
9. எண்ணெய் மற்றும் தேன் இவற்றுள் அதிக பாகுநிலை கொண்டது எது? ஏன்?
விடைக்குறிப்பு:
- தேன்
- பாகியல் விசை மற்றும் பாகியல் எண் எண்ணெய்யை விட தேனுக்கு அதிகம்.
IX. சுருக்கமான விடையளி.
1. உராய்வை வரையறு. அன்றாட வாழ்வில் உராய்வின் பயன்பாட்டிற்கு இரு உதாரணம் தருக.விடைக்குறிப்பு:
- ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசையானது உராய்வு ஆகும்.
- பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுதுதல்.
- துணிகளை தைத்தல்
2. உராய்வைக் குறைக்க ஏதேனும் மூன்று வழிமுறைகளைக் கூறுக.
விடைக்குறிப்பு:
- உயவுப் பொருள்களை பயன்படுத்துதல்
- இரு பரப்புகளுக்கு இடையே குறைந்த விசையைச் செலுத்துதல் வேண்டும்.
- பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்.
3. பாஸ்கல் விதியைக் கூறி அதன் பயன்பாடுகளைத் தருக.
விடைக்குறிப்பு:
பாஸ்கள் விதி:
- மூடிய அமைப்பில் ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் எந்த வொரு புள்ளியிலும் அளிக்கப்படும் அழுத்தமானது அந்திரவத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
- பழுது நிக்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த
- வாகனங்களில் உள்ள தடை அமைப்பு
- ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவிற்கு அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு.
4. மிதிவண்டியின் அச்சுகளில் பந்து தாங்கிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
விடைக்குறிப்பு:
- உருளும் உராய்வு நழுவு உராய்வை விடக் குறைவு
- அதனால் உராய்வைக் குறைப்பதற்குப் பந்து தாங்கிகளைப் பயன்படுத்தி நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றியமைக்க.
X. விரிவான விடையளி.
1. உராய்வு ஒரு தேவையான தீமை விளக்குக.விடைக்குறிப்பு:
உராய்வு ஒரு தேவை:
- உராய்வின் காரணமாக எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடியாது.
- உராய்வின் காரணமாகவே நம்மால் சாலைகளில் நடக்க முடிகிறது.
- உராய்வின் காரணமாகவே பேனாவைக் கொண்டு காகிதக்கில் எழுத முடிகிறது.
- கருவிகளில் உள்ள பற்சட்ட அமைப்பு, திருகுகள் போன்றவை ஒன்று மற்றொன்றின் மீது தேய்க்கப்படுவதால் தேய்மானம் அடைகிறது.
- ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
- உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது.
- உராய்வினால் பெரும்பாலான வேலைகள் எளிதானாலும் சில தீய விளைவுகளும் உண்டு.
- எனவே உராய்வை தேவையான தீமை என்கின்றோம்.
விடைக்குறிப்பு:
உராய்வின் வகைகள்:
அ. நிலை உராய்வு
ஆ இயக்க உராய்வு
அ) நிலை உராய்வு :
- ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்.
- புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன.
- (எ.கா) கயிற்றில் உள்ள முடிச்சு
- பொருள்கள் இயக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும்.
- இயக்க உராய்வு இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
- i) நழுவு உராய்வு
- ii) உருளும் உராய்வு
- ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருட்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
- (எ.கா.) இரண்டு கரங்களைத் தேய்க்கும் போது எற்படும் உராய்வு.
- ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருள்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும்.
- (எ.கா.) தள்ளுவண்டிகளில் பொருத்தப்படும் சக்கரம்
3. உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
விடைக்குறிப்பு:
- மேஜை, புத்தகங்கள், அகலமான அளவுகோல், காகிதம், கண்ணாடி, பருத்திதுணி, மரப்பலகை, செய்தித்தாள், எழுதப்பயன்படுத்தும் அட்டை மற்றும் கோலிக்குண்டு
- மேஜையின் மீது புத்தகங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும்.
- புத்தகம் மீது அகலமான ஒரு அளவு கோலை சாய்வாக வைக்கவும்.
- அளவுகோல் மேஜையைத்
- தொடும் இடத்தில் செவ்வக வடிவிலான காகிதத்தை மேஜையின் மீது பரப்பவும்.
- கோலிக்குண்டுகளை அளவுகோலின் மீது நழுவச் செய்யவும்.
- கோலிக்குண்டு அளவுகோலில் இருந்து காசிதத்தில் உருண்டு ஓடும்.
- கோலிக்குண்டு ஒய்வுநிலையை அடைந்த பிறகு ஒரு மீட்டர் அளவுகோல் மூலம் தொலைவை அளக்கவும்.
- இந்த முறையில் மற்ற பொருட்களையும் மேஜையின் மீது பரப்பி சோலிக்குண்டினை நழுவச்செய்து ஓய்வுநிலையை அடைந்த பிறகு அளவுகோல் மூலம் தொலைவை அளந்து கொள்ளவும்.
- கோலிக்குண்டு கண்ணாடிப் பரப்பில் கடந்த தொைைவவிட பருத்தித்துணியில் கடந்த தொலைவு குறைவு.
- மேற்கண்ட சோதனையிலிருந்து பரப்பின் சொர சொரப்புத்தன்மை அதிகரித்தல் உராய்வு அதிகரிக்கும்.
- எனவே உராய்வு பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பது தெளிவாகிறது.
விடைக்குறிப்பு:
- உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும்.
- இரண்டு பொருட்கள் ஒன்றையொன்று தொடும் ஒழுங்கற்ற பரப்புகளின் இடையில் உயவுப் பொருள் சென்று நிரம்பும்.
- உயவுப் பொருட்கள் நிரம்புவதால் ஒரு வழவழப்பான உறை உருவாகிறது.
- இது இரு பரப்புகளுக்கான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வைக் குறைக்கிறது.
- பந்து தாங்கிகளைப் பயன்படுத்தி நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
- உருளும் உராய்வு நழுவு உராய்வை விடக் குறைவு.
- உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய்.
5. ஆழத்தைச் சார்ந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
விடைக்குறிப்பு:
செய்முறை:
- ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரே திசைபில் மூன்று வெவ்வேறு உயரங்களில் மூன்று துளைகள் இடவும்.
- நீரைக் கொண்டு பாட்டிலை நிரப்பவும் மற்றும் துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்று நோக்கவும்.
காண்பது:
- பாட்டிலின் அடிப்பாகத்தின் அருகே உள்ள துளை வழியாக அதிக விசையுடன் நீர் வெளியேறி நீண்ட தொலைவில் போய் விழுகிறது. பாட்டிலின் மேற்புறம் உள்ள துளை வழியாகக் குறைந்த விசையுடன் நீர் வெளியேறி குறைந்த தொலைவில் போய் விழுகிறது.
- இந்தச் சோதனையின் மூலம் ஆழம் அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உறுதியாகிறது.
XI. உயர் சிந்தனை வினாக்கள்.
1. வானூர்தியில் பயணம் செய்யும் போது மைப் பேனாவைப் பயன்படுத்துவது உகந்ததல்ல? ஏன்?விடைக்குறிப்பு:
- பேனாவினுள் மை மற்றும் காற்று அடங்கி இருக்கும்.
- வானூர்தி வானில் பறக்கும் போது அதன் உள்ளே அழுத்தம் குறைவாக இருக்கும்.
- அழுத்தம் குறைவாக இருக்கும் போது பேனாவினுள் உள்ள காற்று விரிவடைந்து மையை வெளியேற்றும்.
- அதனால் வானூர்தியில் பயணம் செய்யும் போது மைப் பேனாவைப் பயன்படுத்துவது உகந்ததல்ல.
2. உராய்வின் எண் மதிப்பை நேரடியாக அளவிட உதவும் சிறப்புமிக்க கருவியை உருவாக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
விடைக்குறிப்பு:
- உராய்வின் எண்மதிப்பை நேரடியாக அளவிடுவதற்கு ஓர் எளிய இயந்திரம் உருவாக்கப்பட்டது.
- இந்தக்கருவி 0.01டைன் முதல் 50டைன் அளவு வரை உள் சாய்வு விசையைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறது.
- இந்தக்கருளி சிறப்பாகச் செயல்பட்டு உராய்வின் எண்மதிப்பை அறிந்து கொள்ள முடியும்.
- இன்னும் இந்தக் கருவியை மேன்மைப்படுத்தி சிறப்புமிக்க கருவியாக உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
3. பாதரசம் விலை உயர்ந்தது என வித்யா நினைக்கிறாள். எனவே பாதரசத்திற்குப் பதிலாக காற்றழுத்தமானியில் நீரைப் பயன்படுத்த அவள் விரும்புகிறாள். தண்ணீர் காற்றழுத்தமானி அமைப்பதில் உள்ள சிக்கல்களைக் கூறு.
விடைக்குறிப்பு:
- பாரோ மீட்டரில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்தக் கூடாது.
- நீரின் அடர்த்தி பாதரசத்தின் அடர்த்தியை விடக் குறைவு.
- நீரின் அழுத்தம் அதிகம்.
- பாதரசத்தின் உருகுநிலை நீரைவிட மிகக் குறைவு.
- பாதரசம் விரைவில் ஆவியாகாது.
- பாதரசம் நீரைவிட பளபளப்பாக இருப்பதால் அதைப் பாரோ மீட்டரில் பயன்படுத்தும் போது எளிதாக அடையாளம் காண முடியும்.
- இதனால் நீரை பாரோ மீட்டரில் பயன்படுத்தினால் சரியான அளவை நாம் பெற இயலாது.
- பாதரசமே சரியான அளவைக் கொடுக்கிறது.







0 Comments:
Post a Comment