8th Science - Book Back Answers - Unit 22 - Tamil Medium Guides



 


    8th Science - Book Back Answers - Unit 22 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard  Science - Unit 22: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 22 – from the Tamil Nadu State Board 8th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 22 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 22: தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் __________ என அழைக்கப்படுகின்றன.
    அ) விலங்கினங்கள்
    ஆ) தாவர இனங்கள்
    இ) உள்ளூர் இனம்
    ஈ) அரிதானவை
    விடைக்குறிப்பு: 
    இ) உள்ளூர் இனம்

    2. காடு அழிப்பு என்பது __________.
    அ) காடுகளை அழித்தல்
    ஆ) தாவரங்களை வளர்ப்பது
    இ) தாவரங்களை கவனிப்பது
    ஈ) இவை எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    அ) காடுகளை அழித்தல்

    3. சிவப்பு தரவு புத்தகம் __________ பற்றிய பட்டியலை வழங்குகிறது.
    அ) உள்ளூர் இனங்கள்
    ஆ) அழிந்துபோன இனங்கள்
    இ) இயற்கை இனங்கள்
    ஈ) இவை எதுவுமில்லை
    விடைக்குறிப்பு: 
    ஈ) இவை எதுவுமில்லை

    4. உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை __________.
    அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்
    ஆ) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்
    இ) இரண்டும்
    ஈ) இவை எதுவுமில்லை
    விடைக்குறிப்பு: 
    அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்

    5. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் __________ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
    அ) 1986
    ஆ) 1972
    இ) 1973
    ஈ) 1971
    விடைக்குறிப்பு:
    ஆ) 1972

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. WWF என்பது __________ ஐ குறிக்கிறது.
    விடைக்குறிப்பு: 

    உலக வனவிலங்கு நிதி

    2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் __________ என அழைக்கப்படுகின்றன.
    விடைக்குறிப்பு: 

    உள்ளூர் இனம்

    3. சிவப்பு தரவுப் புத்தகம் __________ ஆல் பராமரிக்கப்படுகிறது.
    விடைக்குறிப்பு: 

    IUCN இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்

    4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    விடைக்குறிப்பு: நீலகிரி

    5. __________ நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    விடைக்குறிப்பு: 

    மார்ச் 3 ஆம்

    III.  பொருத்துக.  

    1
    கிர் தேசியப் பூங்கா
    மத்திய பிரதேசம்
    2
    சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா
    உத்தரகண்ட்
    3
    இந்திராகாந்தி தேசியப் பூங்கா
    மேற்கு வங்கம்
    4
    கார்பெட் தேசியப் பூங்கா
    குஜராத்
    5
    கன்ஹா தேசியப் பூங்கா
    தமிழ்நாடு
    விடைக்குறிப்பு:
    1
    கிர் தேசியப் பூங்கா
    குஜராத்
    2
    சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா
    மேற்கு வங்கம்
    3
    இந்திராகாந்தி தேசியப் பூங்கா
    தமிழ்நாடு
    4
    கார்பெட் தேசியப் பூங்கா
    உத்தரகண்ட்
    5
    கன்ஹா தேசியப் பூங்கா
    மத்திய பிரதேசம்
     

    IV. மிகச் சுருக்கமான விடையளி.

    1. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?
    • வளிமண்டலத்தில் சேரும் பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெட்ப ஆற்றலை உட்கவர்கின்றன. 
    • இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. 
    • இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.

    2. அழிந்து வரும் சிற்றினங்கள் என்றால் என்ன?
    • விரைவில் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிந்து வரும் சிற்றினங்கள் எனப்படும்.

    3. அழிந்து போன உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
    • பெங்கால் புலிகள்
    • ஆசிய சீட்டா

    4. அழியும் தருவாயில் உள்ள இரண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறுக.
    • பனிச் சிறுத்தை
    • ஆசிய சிங்கம்

    5. IUCN என்றால் என்ன?
    • இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டு துறையில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

    V. சுருக்கமான விடையளி.

    1. உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?
    • உயிரக்கோளம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
    • சுற்றுச்சூழல் அமைப்பு, சிற்றினங்கள் மற்றும் மரபணு வளங்களைப் பாதுகாக்கின்றன. 
    • இந்தப் பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.

    2. திசு வளர்ப்பு என்றால் என்ன?
    • திங்குயிரிகள் அழிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க ஊடகத்தில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவரப் பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பமே திசு வளர்ப்பு ஆகும்.

    3. அழியும் தருவாயில் உள்ள இனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
    • பூமியிலிருந்து மறைந்து போய்விடக்கூடிய அபாயத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் எனப்படும்.
    • எ.கா: பனிச் சிறுத்தை, வங்காள புலி

    4. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகளை எழுதுக.
    • இது ஒரு குறிப்பிட் இனத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
    • இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய முடியும்.
    • உலகளவில் அழிந்து போகும் ஒரு இனத்தின் அபாயத்தை இந்த புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம்.
    • அழியும் தருவாயில் உள்ள சிற்றினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.

    5. தமிழ்நாட்டில் உள்ள நான்கு வனவிலங்கு சரணாலங்களைப் பட்டியலிடுக.
    • 1. மேகமலை வனவிலங்கு சரணாலயம் - தேனி
    • 2. வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் - சென்னை
    • 3. களக்காடு வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி
    • 4. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம்

    6. உயிர்வழிப்பெருக்கம் என்ற வார்த்தையால் நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
    • சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நச்சுப்பொருள்களின் அளவு அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டேன். 

    7. பி.பி.ஆர் (PBR) என்றால் என்ன?
    • மக்கள் பல்லுயிர் பன்முகத் தன்மை பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்களை பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு ஆவணமாகும்.

    VI. விரிவான விடையளி.

    1. காடு அழிப்பு என்றால் என்ன? காடு அழிப்பிற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை விளக்குக.
    காடு அழிப்பு:
    • பல்வேறு தேவைகளுக்கு நிலபரப்பை பயன்படுத்துவதற்காக காடுகளை அழிப்பதை காடுகள் அழிப்பு என்கிறோம்.
    காடு அழிப்பிற்கான காரணங்கள்:
    • காடழிப்பு இயற்ககையால் ஏற்படலாம் அல்லது அது மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். 
    • தீ மற்றும் வெள்ளம் போன்றவை காடழிப்புக்கான இயற்கை காரணங்களும். 
    • வேளாண்மை அதிகரிப்பு, காலநடை வளர்ப்பு, சட்டவிரோத மரம் வெட்டுதல், சுரங்கம், எண்ணெய் பிரித்தெடுத்தல், அணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை காடு அழிப்பிற்கான மனித செயல்பாடுகளாகும்.
    காடழிப்பின் விளைவுகள்:
    அ. சிற்றினங்களின் அழிவு: 
    • காடழிப்பின் விளைவாக பல அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிற்றினங்கள் அழிந்துவிட்டன. 
    • மேலும் அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்கள் சிற்றினங்களின் அழிவு எனப்படும்.
    ஆ. மண் அரிப்பு: 
    • மரங்கள் வெட்டப்படும் போது, மண் அரிக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் நீக்கப்படுகிறது.
    இ. நீர் சுழற்சி: 
    • மரங்களை வெட்டும் போது வெளியாகும் நீராவியின் அளவு குறைகிறது. எனவே மழைப்பொழிவு குறைகிறது.
    ஈ. வெள்ளம்: 
    • மரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் தடைபடுகிறது. சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.
    உ. புவி வெப்பமயமாதல்: 
    • காடழிப்பு மரங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
    • எனவே கார்பன் டை ஆக்சைடு அளவு வளிமண்டலத்தில் அதிகமாகிறது. 
    • கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது. 
    • இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகின்றன.
    ஊ. வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல்: 
    • காடுகளை அழிப்பது பழங்குடியினரின் வாழ்க்கை முறையை பாதிக்கிறது.

    2. உள்வாழிடப் பாதுகாப்பு மற்றும் வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகளை விவாதிக்கவும்.
    உள்வாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்:
    • சிற்றினங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம்.
    • சிற்றினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்.
    • இயற்கை வாழ்விடங்கள் பராமரிக்கப்படுகின்றன.
    • இது குறைந்த செலவினத்துடன் நிர்வகிக்க எளிதானது.
    • பழங்குடியின மக்களின் தேவைகள் பாதுகாக்கப்படுகின்றன.
    வெளிப்புற பாதுகாப்பின் நன்மைகள்:
    • இது சிற்றினங்களின் அழிவை தடுக்கிறது.
    • அழியும் நிலையிலுள்ள விலங்குகளை இந்த வழிகளின் மூலம்
    • இனப்பெருக்கம் செய்யலாம். 
    • இயற்கை குழலில் வளர்க்கப்படுகின்றன.
    • ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளுக்கு உதவுகிறது.

    3. ப்ளூ கிராஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.
    • ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு ஆகும்.
    • இது 1897-இல் நிறுவப்பட்டது.
    • ஒவ்வொரு செல்லப்பிராணியும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
    • தனியார் கால்நடை சிகிச்சையை பெற முடியாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு தங்கள் பிராணிகளுக்கு தேவையான வசதிகளை பெற உதவுகிறது.
    • மேலும் விலங்குகளின் உரிமைகளை பொதுமக்களுக்கு கற்பிக்கிறது.
    • கேப்டன் வி.சுந்தரம் 1959-ஆம் ஆண்டில் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை நிறுவினார்.
    • மருத்துவமனைகள், தங்குமிடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளுடன் சென்னை கிண்டியில் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது.

    4. வன உயிரிகள் பாதுகாப்பின் வகைகளை விவரி. 
    • பாதுகாப்பு என்பது இரண்டு வகையாகும்.
    அ. உள்வாழிட பாதுகாப்பு:
    • இயற்கை சுற்றுச்சூழலில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதாகும்.
    • தேசிய பூங்காக்கள், வன விலங்குகள் அல்லது பறவைகள் சரணாலயங்கள் மற்றும் உயிர்க்கோள இருப்புகள் போன்ற சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இயற்கை வாழ்விடங்களுடன் ஆபத்தான அழிவிலுள்ள உயிரினங்களை பராமரிப்பதன் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.
    • இந்தியாவில் சுமார் 73 தேசிய பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோள இருப்புகள் உள்ளன.
    நன்மைகள்:
    • இனங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம்.
    • இது குறைந்த செலவீனத்துடன் நிர்வகிக்க எளிதானது.
    ஆ.வெளிவாழிட பாதுகாப்பு:
    • இது உயிரினங்களை வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகும். 
    • உயிரியல் பூங்காக்கள் மற்றும் தாவர தோட்டங்களை நிறுவுதல், மரபணுக்கள் பாதுகாப்பு நாற்று மற்றும் திசு வளர்ப்பு ஆகியவை இந்த முறையில் பின்பற்றப்படும் சில உத்திகள் ஆகும்.
    • அ) தாவரவியல் பூங்காக்கள்
    • ஆ) உயிரியல் பூங்கா
    • இ) திச வளர்ப்பு
    • ஈ) விதை வங்கி
    • உ) க்ரையோ வங்கி
    நன்மைகள்:
    • இது உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுகிறது.
    • ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளை நடத்துவதற்கு இரு பயனுள்ளதாக இருக்கும்.

    VII.  உயர் சிந்தனை வினாக்கள்.

    1. இன்று டைனோசர்களைக் காண முடியுமா? இல்லையெனில், அவை ஏன் காணப்படுவதில்லை?
    • காணமுடியாது.
    • சுற்றுப்புற சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அழிந்துவிட்டது.

    2. காடுகள் அழிப்பால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றனவா? எவ்வாறு?
    • ஆம்
    • விலங்கினங்கள் அவற்றின் வாழிடங்களை இழக்கின்றன.
    • காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.
    • காடுகளை அழிப்பதால் பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவதினால் விலங்குகள் கிராம மற்றும் நகர்புறங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கின்றன.

    3. புலி மற்றும் புல்வாய் மான்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
    • அதிக அளவு வேட்டையாடுதல்
    • காடுகளை அழித்தல்
    • மனிதர்களின் குறுக்கீடு
    • இயற்கை வாழிடங்கள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் புலி மற்றும் புல்வாய் மான்களின் எண்ணிக்கை குறைகிறது.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive