8th Science - Book Back Answers - Unit 10 - Tamil Medium Guides



 


    8th Science - Book Back Answers - Unit 10 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard  Science - Unit 10: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 10 – from the Tamil Nadu State Board 8th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 10:நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. காகிதம் எரிதல் என்பது ஒரு __________ மாற்றம்.
    அ) இயற்பியல்
    ஆ) வேதியியல்
    இ) இயற்பியல் மற்றும் வேதியியல்
    ஈ) நடுநிலையான
    விடைக்குறிப்பு: 
    ஆ) வேதியியல்

    2. தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
    அ) இயல்நிலையில் சேர்தல்
    ஆ) மின்சாரம் 
    இ) வினைவேக மாற்றி
    ஈ) ஒளி 
    விடைக்குறிப்பு: 
    அ) இயல்நிலையில் சேர்தல்

    3. __________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
    அ) வெள்ளீயம்
    ஆ) சோடியம்
    இ) காப்பர்
    ஈ) இரும்பு
    விடைக்குறிப்பு: 
    ஈ) இரும்பு

    4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி __________.
    அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு
    ஆ) மெலனின்
    இ) ஸ்டார்ச்
    ஈ) ஓசோன்
    விடைக்குறிப்பு: 
    ஆ) மெலனின்

    5. பிரைன் என்பது __________ இன் அடர் கரைசல் ஆகும்.
    அ) சோடியம் சல்பேட்
    ஆ) சோடியம் குளோரைடு
    இ) கால்சியம் குளோரைடு
    ஈ) சோடியம் புரோமைடு
    விடைக்குறிப்பு: 
    ஆ) சோடியம் குளோரைடு

    6. சுண்ணாம்புக்கல் __________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
    அ) கால்சியம் குளோரைடு
    ஆ) கால்சியம் கார்பனேட்
    இ) கால்சியம் நைட்ரேட்
    ஈ) கால்சியம் சல்பேட்
    விடைக்குறிப்பு: 
    ஆ) நால்சியம் கார்பனேட்

    7. கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?
    அ) வெப்பம்
    ஆ) ஒளி
    இ) மின்சாரம்
    ஈ) வினைவேக மாற்றி
    விடைக்குறிப்பு: 
    இ) மின்சாரம்

    8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
    அ) நைட்ரஜன்
    ஆ) ஹைட்ரஜன்
    இ இரும்பு
    ஈ) நிக்கல்
    விடைக்குறிப்பு: 
    இ) இரும்பு

    9. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் _________ ஐ உருவாக்குகின்றன.
    அ) அமிலமழை
    ஆ) காரமழை
    இ) அதிகமழை
    ஈ) நடுநிலைமழை
    விடைக்குறிப்பு: 
    அ) அமிலமழை

    10. __________ புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன. 
    அ) கார்பன் டை ஆக்சைடு
    ஆ) மீத்தேன்
    இ) குளோரோ புளூரோ கார்பன்கள்
    ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்
    விடைக்குறிப்பு: 
    ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. ஒளிச்சேர்க்கை என்பது __________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
    விடைக்குறிப்பு: 
    ஒளி

    2. இரும்பாலான பொருள்கள் __________ மற்றும் __________ உதவியுடன்
    துருப்பிடிக்கின்றன.
    விடைக்குறிப்பு:
     
    நீர், ஆக்சிஜன்

    3. __________ தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.
    விடைக்குறிப்பு: 
    அம்மோனியா

    4. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் __________ வாயுக்களைத் தருகிறது.
    விடைக்குறிப்பு: 
    குளோரின், ஹைட்ரஜன்

    5. __________ என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்.
    விடைக்குறிப்பு: 
    வினைவேக மாற்றி

    6. வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம்
    __________ என்ற நொதியாகும்.
    விடைக்குறிப்பு:
     
    பாலிபீனால் ஆக்சிடேஸ் (அ) ரைரோசினேஸ்

    III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

    1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.
    விடைக்குறிப்பு:
     
    • தவறு
    • ஒரு வேதிவினை என்பது நிரந்தர வினையாகும்.

    2. லெட் நைட்ரேட் சிதைவடைதல் ஒளியின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.
    விடைக்குறிப்பு: 

    • தவறு
    • லெட் நைட்ரேட் சிதைவடைதல் வெப்பத்தின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

    3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நிற்றுச் சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பம் கொள் வினையாகும்.
    விடைக்குறிப்பு: 

    • தவறு
    • சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச் சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்ப உமிழ் வினையாகும்.

    4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.
    விடைக்குறிப்பு: 

    சரி

    5. வேதிவினைகள் நிகழும் பொழுது ஒளி ஆற்றல் வெளிப்படலாம்.
    விடைக்குறிப்பு: 

    சரி

    IV.  பொருத்துக.  

    அ)
    1
    துருப்பிடித்தல்
    ஒளிச்சேர்க்கை
    2
    மின்னாற்பகுத்தல்
    ஹேபர் முறை
    3
    வெப்ப வேதிவினை
    இரும்பு
    4
    ஒளி வேதிவினை
    பிரைன்
    5
    வினைவேக மாற்றம்
    சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
    விடைக்குறிப்பு:
    1
    துருப்பிடித்தல்
    இரும்பு
    2
    மின்னாற்பகுத்தல்
    பிரைன்
    3
    வெப்ப வேதிவினை
    சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
    4
    ஒளி வேதிவினை
    ஒளிச்சேர்க்கை
    5
    வினைவேக மாற்றம்
    ஹேபர் முறை
    ஆ)
    1
    கெட்டுப்போதல்
    சிதைவடைதல்
    2
    ஓசோன்
    உயிரி வினையூக்கி
    3
    மங்குதல்
    ஆக்சிஜன்
    4
    கஸ்ட்
    வேதிவினை
    5
    கால்சியம் ஆக்சைடு
    உ ணவு
    விடைக்குறிப்பு:
    1
    கெட்டுப்போதல்
    உ ணவு
    2
    ஓசோன்
    ஆக்சிஜன்
    3
    மங்குதல்
    வேதிவினை
    4
    கஸ்ட் 
    உயிரி வினையூக்கி
    5
    கால்சியம் ஆக்சைடு
    சிதைவடைதல்

     

    V. சுருக்கமான விடையளி.

    1. வேதிவினை என்பதை வரையறு.
    • வேதிவினை என்பது நிரந்தரமான, மீளாத்தன்மையுடைய மற்றும் புதிய பொருளை  உருவாக்ககூடிய ஒரு மாற்றமாகும்.
    • வேதியியல் மாற்றங்களை வேதிவினைகள் என்றும் அழைக்கலாம். 

    2. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.
    • இயல்நிலையில் சேர்தல்
    • வினைபடு பொருள்களின் கரைசல்
    • மின்சாரம்
    • வெப்பம்
    • ஒளி
    • வினைவேக மாற்றி

    3. வினைவேக மாற்றம் என்பதை வரையறு.
    • ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றியமைக்ககூடிய செயல் வினைவேக மாற்றம் எனப்படும்.

    4. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது என்ன நிகழ்கிறது?
    • ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறமாக மாற்றமடைகின்றன.
    • காரணம், இரும்பு, காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினைக்கு உட்படுகின்றது.

    5. மாசுபடுதல் என்றால் என்ன?
    • சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.

    6. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    • பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பில் நடைபெறும் வேதிவினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழப்பது மங்குதல் எனப்படும்.
    • எ.கா வெள்ளிப் பொருட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.

    7. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
    • சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளிவருகின்றன.

    8. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா அல்லது வெப்பம் கொள்வினையா?
    வெப்ப கொள்வினை

    9. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?
    வினையின் வேகத்தை மாற்றுகின்றது.

    10. ஒளிச்சேர்க்கை ஏன் ஒரு வேதிவினையாகும்.
    • தாவரங்களில் உள்ள பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன்டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைக் கொண்டு ஸ்டார்ச்சை உருவாக்குகிறது.
    • இவ்வாறாக ஒளியின் துணைகொண்டு தூண்டப்படும் ஒளிச்சேர்க்கை நிகழ்வு ஒரு வேதிவினையாகும்.

    VI. விரிவான விடையளி.

    1. வேதிவினை மூலம் சுற்றுசூழல் மீது ஏற்படும் விளைவுகளை விளக்குக.
    அ) மாசுபடுதல்
    • சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.
    • இம்மாற்றங்களுக்குக் காரணமான பொருட்கள் மாசுபடுத்தி எனப்படும்.
    • காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுதல் என மூன்று வகைப்படும்.
    • செயற்கையாக தயாரிக்கப்படும் ஏராளமான வேதிப்பொருள்கள். உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
    ஆ) துருப்பிடித்தல்:
    • நீர் மற்றும் ஆக்சிஜனுடன் இரும்பு உலோகம் புரியும் வேதிவினை துருப்பிடித்தல் எனப்படும்.
    இ) உலோகப் பொருட்களின் நிறம் மங்குதல் (கறுத்து போதல்)
    • காற்றுடன் புரியும் வேதிவினைகளால் பளபளப்பான உலோக பொருட்களின் நிறம் மங்கி பளபளப்புத் தன்மை குறைகிறது.
    • இதனை கறுத்துப் போதல் என்கிறோம்.
    • எ.கா: வெள்ளிப் பொருட்கள் காற்றுடன் வினைபுரிந்து கருமை நிறமாக மாறுகிறது.

    2. உணவுப் பொருள்கள் எவ்வாறு வேதிவினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குக.
    • மனிதன் உண்ணத் தகுதியில்லாத உணவுப்பொருளில் ஏற்படும் மாற்றம் உணவுக் கெட்டுப் போதல் எனப்படும்.
    • என்சைம் என்ற உயிரி வினைவேக மாற்றி மூலம் நடைபெறும் வேதிவினைகளால் ஊட்டச்சத்து இழப்பு, துர்நாற்றம், பேன்றவற்றால் உணவின் தரம் குறைகின்றது.
    • மீன் மற்றும் இறைச்சியும் காற்று அல்லது ஒளியுடன் ஆக்ஸிஜனேற்ற வினையில் ஈடுபட்டு துர்நாற்றத்தை வெளியிடுகின்றன.
    • பழங்கள் நறுக்கியபிறகு காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வேதிவினையில் ஈடுபட்டு பழுப்புநிறமடைகின்றன.

    3. ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    அ) இயல்நிலையில் சேர்தல்:
    • வினைபடு பொருள்கள் அவற்றின் இயல் நிலையான திட, திரவ, வாயு நிலையில் வினைபுரிதல் இயல் நிலையில் சேர்தல் ஆகும்.
    • எடுத்துக்காட்டு: காய்ந்த விறகுகள் நெருப்புடன் தொடர்பு கொள்ளும்போது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரிந்து கார்பன்டை ஆக்ஸைடை புகையாக வெளியிடுகிறது.
    ஆ) வினைபடு பொருள்களின் கரைசல்:
    • இரண்டு வினைபடு பொருள்களை கரைசல நிலையில் சேர்க்கும்பொழுது புதிய விளை பொருள்களை தருகின்றன.
    • எடுத்துக்காட்டு: சோடியம் குளோரைடு கரைசலுடன் சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வேதிவினை நிகழ்ந்து வெண்மை நிற சில்வர் குளோரைடு வீழ்படிவும், சோடியம் நைட்ரேட் கரைசலும் கிடைக்கின்றது.
    ஆ) வெப்பம்:
    • ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது வேதிவினை நிகழ்கிறது
    • எடுத்துக்காட்டு: லெட் நைட்ரேட்டை வெப்பப்படுத்தும்பொழுது படபட என வெடி ஒலியுடன் வேதிவினை நிகழ்ந்து செம்பழுப்பு நிற வாயு நைட்ரஜன் டை ஆக்சைடு வெளிவருகிறது.

    VII.  உயர் சிந்தனை வினாக்கள்.

    1. ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.
    • ஈஸ்ட் பெரிய ஸ்டார்ச் மூலக்கூறுகளை, சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
    • கேக் மாவில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்க செய்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.
    • மாவானது துளைகளுடன் உப்புகிறது.
    • இதனால் கேக் மற்றம் பன்கள் மிருதுவாக மாறுகிறது.

    2. புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருள்களை எரித்ததே காரணம் என்பதை நியாயப்படுத்துக.
    • படிம எரிபொருட்களை எரிக்கும் போது கார்பன் டை ஆக்சைடு உருவாகின்றது.
    • புவி வெப்பமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம்.
    • எனவே புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக அமைகின்றது. 

    3. கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்
    விடைக்குறிப்பு:
     
    வெப்பம்

    ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.
    விடைக்குறிப்பு: 

    வெப்பம், ஒளி

    இ) கோழி முட்டைகளைச் சமைத்தல்.
    விடைக்குறிப்பு: 

    வெப்பம்

    ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்.
    விடைக்குறிப்பு: 

    மின்சாரம்

    4. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதைக் குறித்து விவாதிக்க.
    • படிம எரிபொருட்களான பொட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்தும் வாகனங்கள் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்களை வெளிவிடுகின்றன.
    • தொழிற்சாலைகள் சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளையும் வெளிவிடுகின்றன.
    • காற்றில் கலககும் கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சைடுகள் அனைத்தும் மழைநீரில் கரைந்து அமிலங்களாக மாறுகின்றன.
    • இந்த அமிலங்கள் மழைநீரில் கரைந்து அமில மழையாக பூமியை அடைகின்றன.
    • அமில மழையால் புவியல் தாவரங்கள், விலங்குகள், கட்டிடங்கள் ஆகிய பாதிப்படைகின்றன.

    5. துருப்பிடித்தல் இரும்புப் பொருட்களுக்கு நல்லதா?
    • துருப்பிடித்தல் இரும்புப் பொருட்களுக்கு நல்லது அல்ல.
    • இரும்பு பொருட்கள் துரு பிடிக்கும்போது அதன் வலிமை குறைகிறது மேலும் அது மென்மையான பொருளாக மாறகிறது.
    • துருப்பிடித்த பொருள் பயன்படுவதில்லை.

    6. அனைத்துப் பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.
    • அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாவதில்லை.
    • ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதிவினையில் ஈடுபட்டு பழுப்பு நிறமடைகின்றன. 
    • இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும்.
    • இப்பழங்களின் செல்களில் உள்ள பாலிபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் தொடர்பு கொள்ளும் பொழுது பழங்களில் உள்ள பீனாலிக் சேர்மங்களை மெலனின் எனப்படும் பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன.

    VIII.  நற்பண்பு அடிப்படை வினாக்கள்.

    1. குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக, நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாகவும் இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல கலுகை இருவதாகக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

    அ)) ரமேஷின் அறிவுரை சரியானதா? 

    • ரமேஷின் அறிவுரை சரியானது.

    ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
    • துருப்பிடித்தல் நிகழ்வின் காரணமாக இரும்பினை மென்மையானதாகவும், வலிமையற்றதாகவும் மாற்றுகிறது.
    • எனவே பழைய துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வீடு கட்ட ஏற்றதல்ல.

    இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
    • ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்பு, தனது நண்பர் குமார் மீதும் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காட்டும் அக்கறையை காட்டுகிறது.

    2. பழனிக்குமார் ஒரு வழக்கறிஞர். அவர் வாடகை அதிகமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அதிகமான வாடகை தர இயலாமல் அருகில் வேதித் தொழிற்சாலை உள்ள ஒரு இடத்தில் குடியேற விரும்புகிறார். அங்கு வாடகை மிகவும் குறைவு. மேலும் மக்கள் நெருக்கமும் குறைவு, 8-வது படிக்கும் அவரது மகன் ராஜசேகருக்கு அப்பாவின் முடிவு பிடிக்கவில்லை. தொழிற்சாலையில்லாத வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று கூறுகிறான்.
     
    அ) ராஜசேகர் கூற்று சரியானதா?
    • ஆம். ராஜசேகர் கூற்று சரியானது.

    ஆ) ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிக்குச் செல்ல மறுத்தது ஏன்?
    • தொழிற்சாலை நிறைந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம்.
    • அப்பகுதியில் குடியேறுவதால் நிறைய உடற்கோளாறுகளும், நோய்களும் ஏற்படலாம்.
    • இது பற்றி ராஜசேகர் அறிந்துள்ளதால், அப்பகுதியில் குடியேற மறுக்கிறார்.

    இ) ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
    • ராஜசேகர் அவரது குடும்பத்தில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது தெரிகிறது.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive