தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 25, 2021

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு


தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் தினமும் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளும் இயங்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Post Top Ad