2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 7, 2021

2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்.


2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளிகல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்தியகல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப்,


  சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள்அதிக தரவரிசை பெற்று முதலிடம்பிடித்துள்ளன.

மத்தியஅரசு இது தொடர்பான பட்டியலைவெளியிட்டுள்ளது. எந்த அடிப்படையில் பள்ளிகல்வியில் சில மாநிலங்கள் சிறந்துவிளங்குகின்றன. எந்த மாநிலங்கள் முன்னேறவேண்டியுள்ளது. எந்த


மாநிலங்கள் பரவாயில்லைஎன்ற அடிப்படையில் புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.



மேலும்1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள்அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்

மத்தியஅரசு வெளியிட்ட அந்த அறிக்கையில் இந்தியபள்ளி கல்வி முறை 15 லட்சத்துக்கும்மேற்பட்ட பள்ளிகளையும், கிட்டத்தட்ட 97 லட்சம் ஆசிரியர்களையும், 25 கோடிக்கும்அதிகமான மாணவர்களையும் கொண்ட பல்வேறு சமூகபொருளாதார பின்னணிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரியஒன்று. நாட்டின் மாறுபட்ட கலாச்சாரம் வளரவும் மற்றும்


பாரம்பரியம்வளரவும் போதுமான வாய்ப்பைக் கொடுக்கும்அதே வேளையில், நாடு முழுவதும் கல்வின்தரங்களையும் சீரான தன்மையையும் பராமரிக்கமத்திய பள்ளி கல்வித்துறை அமைப்புபாடுபடுகிறது.

பிஜிஐ



இலவச மற்றும் கட்டாயக் கல்விஉரிமைக்கான குழந்தைகள் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதோடு, அப்போதைய பள்ளி கல்வி மற்றும்எழுத்தறிவுத் துறையும் மேம்படுத்த ((DoSEL) தொடங்கிய திட்டங்கள், கல்வி மக்களுக்கான கிடைப்பதற்கானஅணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இப்போதுகல்வியின் தரத்தை அணுகுவதில் கவனம்செலுத்தி வருகிறோம்.. பள்ளிக் கல்வித் துறையில்மாற்றத்தக்க மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக செயல்திறன் தர குறியீட்டை (பிஜிஐ) டோசெல் ((DoSEL) வடிவமைத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கானபள்ளி கல்வி செயல்திறன் தரவரிசைகுறியீடு (பிஜிஐ) முதன்முதலில் 2017-18 குறிப்பு ஆண்டிற்கானது2019 இல் வெளியிடப்பட்டது. 2018-19க்கான பிஜிஐ 2020 ஆம்ஆண்டில் வெளியிடப்பட்டது.

மொத்தம்ஐந்து மாநிலங்கள்

தற்போது2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன்தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்றுமுதலிடம் பிடித்துள்ளன. சென்ற முறை கேரளாமட்டுமே முதலிடத்தை பிடித்திருந்தது. மத்திய அரசு கிரேடுஒன்று , கிரேடு இரண்டு கிரேடுமூன்று என மொத்தம் 10 கிரேடுகளாகமாநிலங்களை பிரித்துள்ளது. முதல் கிரேடில் எந்தமாநிலமும் இல்லை. அதாவது 950ககுமேல் எந்த மாநிலமும் இல்லை. ஆனால் இரண்டாவது கிரேடில் தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட ஐந்துமாநிலங்கள் 900 முதல் 950 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இரண்டாவது கிரேடு, மூன்று கிரேடுகள்அடுத்தடுத்து 50 மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ளன.

ஆந்திரா



இந்த பட்டியலில் மூன்றாவது கிரேடில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலிகுஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி என்சிஆர், புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 4வது கிரேடில் ஆந்திரா, டையு டாமன், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தரப்பிரதேசம்ஆகியவை உள்ளன. 10வது கிரேடில் அதாவதுகடைசி கிரேடில் லடாக் மாநிலம் உள்ளது.

என்ன காரணம்

மத்தியபள்ளி கல்வித்துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளட்வீட் பதிவில், பள்ளி கல்வி செயல்திறன்தரவரிசை குறியீடு 2019-20 இல் மாநில வாரியானசெயல்திறன்களை முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை2019-20 ஆம் ஆண்டில் மேம்படுத்தியுள்ளன என்பதைக்காட்டுகிறது. கல்வி செயல்திறன் தரவரிசைகுறியீடு வெளியிடுவதன் முக்கிய நோக்கம் உண்மையில்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கல்விசெயல்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் என்றுகூறியுள்ளார்





Post Top Ad