மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு.


மோசடி நடப்பது எப்படி ? மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவ மாண வியரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண் டிருந்து , அவர்கள் வெளி மாநிலங்களில் பணியாற்ற சென்றுவிட்டால் , இருப்பிடச் சான்று தமிழகத்தை காட்டும் நிலை ஏற்படும் . அதேநேரம் பெற்றோர் பணியாற்றும் மாநிலத்திலும் ஒரு இருப்பிட சான்று பெற்று விடுவார்கள் . இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . இங்கு தான் மோசடிகள் தொடங்குகின்றன . இது போல ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் இரண்டு இருப்பிட சான்றுகளை காட்டி கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு வசதியான கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகின்றனர் . இதை மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஏன் கண்டுபிடிப்பது இல்லை என்று குறை உள்ளது . மேலும் கடந்த ஆண்டும் இது போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர் .

Post Top Ad