டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, November 27, 2020

டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி




இறுதியாண்டு  மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள்திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால்மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய 

தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும்பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டுமாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல்திறக்கப்படும் என, ஏற்கனவேஅறிவிக்கப்பட்டது.

இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுஏற்பாடுகளை, உயர் கல்வித்துறைசெய்து வந்தது. அறிவியல் மற்றும்தொழில்நுட்ப கல்லுாரிகளில்இறுதியாண்டு படிக்கும்மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம்தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்தஅனுமதிக்கப்பட்டுள்ளது.


புயல் பாதிப்பு மற்றும் மழைகாரணமாக, வரும், 2ம் தேதிகல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளிவைக்கப்படுமா என, மாணவர்கள்சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில், திட்டமிட்டபடிஇறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்நடத்தப்படும் என, உயர்கல்வி துறைஅமைச்சர் அன்பழகன்அறிவித்துள்ளார். புயல், கனமழைபோன்றவை வந்தால், கல்லுாரிகளைவேறு தேதியில் திறப்பது குறித்துஆலோசிக்கப்படும் என்றும்தெரிவித்துள்ளார்.



Post Top Ad