தணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 29, 2020

தணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்

-


தணிக்கை தொடர்பானஆசிரியர்களுக்கான 10ஆலோசனைகள் :

 வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  மண்டல தணிக்கைத் துறைஅலுவலர்களால், ஆசிரியர்களின்பணிப் பதிவேடு தொடர்பானதணிக்கை நடைபெறும் போது,

தணிக்கை அலுவலர்களால் பொதுவாகசுட்டிக் காட்டப் படும் சிறு சிறுகுறைபாடுகள்:

1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும்முன்னரே, கூடுதல் கல்வித் தகுதிபெற்றிருந்தால், பணியில் சேரும்முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார்என்ற பதிவை வட்டாரக் கல்விஅலுவலருக்கு விண்ணப்பித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

2. உயர் கல்வி பயில்வதற்கான முன்அனுமதி ஆணை வழங்கப் படும்விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்புதான், பணிப் பதிவேட்டில் பதிவுசெய்யப் படுகிறது. அதற்கு முன்னர்ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறைஅலுவலர்கள், பணி நியமன நாள் முதல்இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவுசெய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித்தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லதுபின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம்என வலியுறுத்துகின்றர். ஊக்கஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்விஅலுவலரிடம் காண்பித்து, பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்கும்அனைத்து கல்வித் தகுதிகளுக்கும்உண்மைத் தன்மைச் சான்றினைப்பெற்று பணிப் பதிவேட்டில் பதிவுசெய்திருக்க வேண்டும். அதன் நகலும்ஆசிரியர் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

4. பணிப் பதிவேட்டில், தற்காலிகதேர்ச்சி சான்று மட்டும் பதிவுசெய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்கவேண்டும்.

5. இதற்கு முந்தைய தணிக்கையின்போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டிருந்தால், அவற்றைநிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல்விடுபட்டிருந்தால், அவற்றை உரியஆவணங்களின் அடிப்படையில்விடுதல் பதிவாக பதிவு செய்யவிண்ணப்பித்து, பதிவு செய்யவேண்டும்.

7.  CL, RH தவிர பிற அனைத்து விடுப்புவகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக்காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும்விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ளவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டகாலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவுசெய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்துகொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிபோயிருக்க வேண்டும்.

8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசுநியமனம் இவற்றில் ஏதேனும்மாற்றங்கள் இருப்பின் உடனேவிண்ணப்பித்து சரி செய்து கொள்வதுநல்லது.

9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புகணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

10. பணிப் பதி வேட்டின் நகல்தங்களிடம் இருந்தால், அனைத்துபதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வதுநல்லது.

Post Top Ad