10th Tamil - Unit 7 Book Back Answers - Guide

  
 
 



 


    SSLC / 10th Tamil - Book Back Answers - Unit 7 - Download

    Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 7: 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1) மேன்மை தரும் அறம் என்பது-
     
            அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
     
    2) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
     
           ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்
     
    3) வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
     
             அ) ஒரு சிறு இசை 
     
    4)பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _________ ,_________ வேண்டினார்.
     
              அ) கருணையன், எலிசபெத்துக்காக 
     
    5) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
     
             அ) அகவற்பா 
     

    ஆ) குறு வினா

    1) குறிப்பு வரைக அவையம்.
    • அறம் கூறும் மன்றங்கள் அவையம். இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
     
    2) காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?
    • இளம்பயிர் வளரும் முன் நீரின்றி வாடியது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.
     
    3) குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.  
    • வெண்பாவின்  பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது.
    • எ-கா - முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    • இன்மை புகுத்தி விடும்.
     
    4) சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
    • நீர்நிலை பெருக்குதல், நிலவளம் கண்டு உணவுப்  பெருக்குதல்
     
    5) பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?
    •  பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்தவர் மீதான அக்கறை

    இ) சிறு வினா

    1) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
    • வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும்
    • போரிலும் அறநெறிகளைப் பின்பற்ற வேண்டும். 
    • வணிகத்திலும் அறம் வேண்டும். உண்மை பேசுவதில் அறம். 
    • இவை அனைத்தும் இன்றைக்கும் தேவையே.
     
    2.) வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
    • வாய்மையைச்  சிறந்த அறமாகப் பேசுகின்றன. 
    • வாய்மை பேசும் நாக்கு உண்மையானது.  
    • நாக்கு அதிசயத் திறவுகோல் அது இன்பம், துன்பம் இரணடையும் தரும்.
     
    3) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
    • உயிர் பிழைக்கும் வழிவகை அறியேன்.
    • உடலின் தன்மையை அறியேன்.
    • உணவைத் தேடும் வழி அறியேன்.
    • காட்டில் செல்லும் வழி அறியேன்.
     
    4) ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
    • ஈரைசைச் சீரும் காய்ச்சீரும் வரும்.
    • அகவல் ஓசை பெற்று வரும்.
    • ஆசிரியத்தளை மிகுந்து வரும்.
    • ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
     
    5) சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
    • அறம் என்பது இல்லாதவர்க்குக் கொடுத்து உதவும் ஈகை - கல்வி வழங்குதல், மரம் நடுதல், குளம் வெட்டுதல் ஆகியன சிறந்த அறம் - இன்றைய நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தவறியதால் பூமி வெப்பமானது. 
    • மழை வளம் குறைந்தது. மரங்கள் வெட்டப்படுவதால் பல இன்னல்கள். ஆகவே சுற்றுச்சூழலைப் பேணும் அறம் இன்று அவசியம்.
     

    ஈ) நெடு வினா

    1) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
     
    கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான் . தன் தாயை இழந்து வாடினான். உயிர் பிழைக்கும் வழிவகை , உடலின் தன்மை, ,  உணவைத் தேடும் வழி , காட்டில் செல்லும் வழி ஆகியன அறியாது இருந்தான்.  செய்வதறியாது தவித்தான்.
     
    மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடினான். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல காட்டில் வாடுவதாகப் புலம்பினான். 
     
        கருணையனின் புலம்பலைக் கேட்டு  பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன.இவ்வாறு கருணையன் தன் தாயை இழந்து தவிப்பதை வீரமாமுனிவர் விவரிக்கின்றார்.
     
    2)  கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
     
    முன்னுரை:
     
        கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்குக் காண்போம்.
     
    இராமானுசர் செய்த நிகழ்வு:
     
            பூரணர் இராமானுசரை அழைத்தார். மூவரும் சென்றனர். ஏன் மூவர் உங்களை மட்டும் தானே வரச் சொன்னேன் என்று வினவுகிறார். அதற்கு இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய இருவரும் தண்டு, கொடிக்கு இணை என்றார். 
     
    திருமந்திரம்: 
     
          இராமானுசர் தனது சீடர்களுடன் சென்றார் பூரணர் அவர்களுக்கு மந்திரத்தைக் கூறினார்   யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்   இராமானுசர் அனைவருக்கும் மந்திரத்தைக் கூறினார்  பூரணர் கோபம் கொண்டார்  இராமானுசரின் விளக்கத்தை ஏற்றார்.
     
    முடிவுரை:
     
        கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்குக் கண்டோம்
     
    3) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
     
    அன்புள்ள மாமாவுக்கு,
    நலம். நலமறிய ஆவல். நேற்று விளையாட்டுப் பாடவேளையில் எனது  பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்  பாராட்டினர். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.    
    நன்றி!
    இப்படிக்கு
    தங்கள் அன்புள்ள
    கவின்
     
    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    மரம் தேடிய களைப்பு 
    மின்கம்பியில் 
    இளைப்பாறும் குருவி. 
    - நாணற்காடன்  
     
    விற்பனையில் 
    காற்றுப் பொட்டலம் 
    சிக்கனமாய் மூச்சு விடவும்... 
    - புதுவைத் தமிழ் நெஞ்சன்
     

    ஆ) மொழி பெயர்க்க.

    1.Education is what remains after one has forgotten what one has learned in School. - Albert Einstein
    2. Tomorrow is often the busiest day of the week. -Spanish Proverb
    3. It is during our darkest moments that we must focus to see the light. - Aristotle
    4. Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts. - Winston Churchill.
     
    விடைகுறிப்பு:
     
    1. பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
    2. நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் - ஸ்பானீஷ் பழமொழி
    3. நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாடில்
    4. வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது - வின்ஸ்டன் சர்ச்சில்.
     

    இ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

    மனக்கோட்டை   -படிக்காமலே தேர்ச்சி பெறலாம் என்று  மனக்கோட்டை கட்டினான்.
    அள்ளி இறைத்தல் -  பணத்தை அள்ளி இறைத்தல் கூடாது.
    கண்ணும் கருத்தும் - நான் கண்ணும் கருத்துமாக படித்தேன்.
    ஆறப்போடுதல் - கோபத்தை ஆறப்போட வேண்டும்.
     

    ஈ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

    1. தாமரை இலை நீர்போல - கண்ணனும் ராமனும் தாமரை இலைநீர் போல பட்டும் படாமலும் இருந்தனர்.
     
    2. மழைமுகம் காணாப் பயிர்போல - தாயைக் காணாத சேய் மழைமுகம் காணாப் பயிர்போல வாடியது.
     
    3. ண்ணினைக் காக்கும் இமை போல - தந்தை தன் மகனைக் கண்ணினைக் காக்கும் இமை போல பேணி வளர்த்தார். 
     
    4. சிலை மேல் எழுத்து போல - பெற்றோர் கூறும் அறிவுரைகளைச் சிலை மேல் எழுத்து போல பாதுகாக்க வேண்டும்.
     

    உ) பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

           சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
     
     விடைகுறிப்பு:  
             
             சேரர்களின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன்’, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
     

    ஊ) பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

    பேச்சுவழக்கு:
    “தம்பீ? எங்க நிக்கிறே?”
    “நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
    “அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
    “அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
    “அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
    “ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
    “இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
    “சரிங்கண்ணே ”
     
    எழுத்து வழக்கு:
    “தம்பி எங்கே நிற்கிறாய்?”
    “நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
    “அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
    “அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
    “அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
    “நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
    “இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
    “சரி அண்ணா !”
     

    எ) குறுக்கேழுதுப் புதிர்

    இடமிருந்து வலம்
    1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று (2) - காலை
    2. நேர் நேர் – வாய்பாடு (2)  - தேமா
    11. எட்டுத்தொகை நூல்ளுள் ஒன்று (5)  - கலித்தொகை
    14. மக்ளே போல்ர் (4) - கயவர்
     
    மேலிருந்து கீழ்
    1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது (5) - கார்காலம்
    2. மொழிஞாயிறு (9) - தேவநேயப் பாவாணர்
    3. நல் என்னும் அடைமொழி கொண்டதொகைநூல் (5) - குறுந்தொகை
    4. கழை என்தன் பொருள் (4)   - மூங்கில்
    7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4) - திங்கள
    10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு (4) - சிங்கம்
    12. _________ என்து புறத்திணைகளுள் ஒன்று (4) - கைக்கிளை
     
    வலமிருந்து இடம்
    15. மருந்தேே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் (4) - ஔவையார்
    16. மதிமுகம் உவமைை எனில் முகமதி (5) - உருவகம்
     
    கீழிருந்து மேல்
    5. விடையின் வகைகள் (3).   - எட்டு
    6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் (5)   - தேம்பாவணி
    8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் (4) - செங்கீரை
    9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று (6) - திருக்குறள்
    13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது (7) - மெய்க்கீர்த்தி
    17. 96 வகைச் சிற்றிலக்கிய வகைளுள் ஒன்று (7)- பிள்ளைத்தமிழ்
    18. செய்தவம் – இலக்கணக்குறிப்பு (5) - வினைத்தொகை
     

    ஏ) கடிதம் எழுதுக.

    உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
     
    அனுப்புநர் :
                            வி. கார்த்திக்,
                            18, கணபதி நகர்,
                            அஅஅஅஅ.
     
    பெறுநர்:
                           மின்வாரிய அலுவலர்,
                           தமிழ்நாடு மின்வாரியம்,
                           ஆஆஆஆஆ.
     
    ஐயா,
                பொருள் : பழுதுபட்ட மின்விளக்குகளைச் சரிசெய்யவேண்டி, கடிதம்
     
                   வணக்கம், நான் அஅஅஅஅ கணபதி நகரில் வசித்து வருகிறேன். இங்குள்ள பகுதிகளில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவில் நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளைச் சரி செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு
     வி.கார்த்திக்.  
    உறைமேல் முகவரி:
           பெறுநர்:
                           மின்வாரிய அலுவலர்,
                            தமிழ்நாடு மின்வாரியம்,
                            ஆஆஆ
     

    ஐ) கவிதையைப் படித்து, அதன் உரையாடல் வடிவத்தைத் தொடர்ந்து எழுதுக.

    மகள் சொல்லுகிறாள்: 
    அம்மா என் காதுக்கொரு தோடு - நீ 
        அவசியம் வாங்கி வந்து போடு! 
    சும்மா இருக்க முடியாது நான் 
        சொல்லி விட்டேன் உனக்கு இப்போது ! 
    தாய் சொல்லுகிறாள்: 
    காதுக்குக் கம்மல் அழகன்று நான் 
        கழறுவதைக் கவனி நன்று 
    நீதர் மொழியை வெகுபணிவாய் - நிதம் 
        நீ கேட்டு வந்து காதில் அணிவாய்! 
    மகள் மேலும் சொல்லுகிறாள்: 
    கைக்கிரண்டு வளையல் வீதம்- நீ 
        கடன்பட்டுப் போட்டிடினும் போதும்! 
    பக்கியென் றென்னை யெல்லோரும் - என் 
        பாடசாலையில் சொல்ல நேரும்! 
    தாய் சொல்லும் சமாதானம்: 
    வாரா விருந்து வந்த களையில் - அவர் 
        மகிழ உபசரித்தல் வளையல்! 
    ஆராவமுதே மதி துலங்கு - பெண்ணே 
        அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு! 
    பின்னும் மகள்: 
    ஆபர ணங்கள் இல்லை யானால் - என்னை 
        யார் மதிப்பார் தெருவில் போனால்? 
    கோபமோ அம்மா இதைச் சொன்னால் - என் 
        குறைதவிர்க்க முடியும் 
    அதற்குத் தாய்: 
    கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக் 
        கல்வைத்த, நகைதீராத ரணம்! 
    கற்ற பெண்களை இந்த நாடு - தன் 
    கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு! 
    -பாரதிதாசன் 
     
    விடைகுறிப்பு: 
     
    மகள் : அம்மா. என் காதுக்குத் தோடு அவசியம் வாங்கித் தர வேண்டும். தோடு போடாமல் இருக்க முடியாது 
    அம்மா: காதுக்குத் தோடு அழகல்ல. நான் சொல்வதைக்கேள். நல்ல மொழிகளைக் கேட்பதே அணிகலன் ஆகும். 
    மகள் : என் கைக்கு இரண்டு வளையல் வீதம். கடன் வாங்கியாவது போடு. 
    அம்மா: வராத விருந்தினர் களைப்புடன் வந்தால் அவர்களை உபசரித்தலே உனக்கு வளையல் போட்டது போல. அவ்வாறு இல்லையெனில் வளையல் கைவிலங்குப் போட்டது போல் ஆகும். 
    மகள் : அம்மா. நகை இல்லாவிட்டால் யார் என்னை மதிப்பார்கள். ஆகவே என் குறையைத் தீர்க்கவும். 
    அம்மா : மகளே! கல்வியேப் பெண்களுக்கு அழகு. அணிகலன்களோ ஆபத்து தரும். கற்றப் பெண்களைத்தான் இந்நாடு போற்றும்.
     

    ஒ) கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.

    கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும். 
     
    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த 
            குளிர்தருவே தரு நிழலே நிழல்கனிந்த கனியே 
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே 
            உகந்ததண்ணீர் இடை மலர்ந்த சுகந்தமண மலரே 
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 
            மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே 
    ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் 
            ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே! 
    வள்ளலார் 
    திரண்டக் கருத்து 
    • கோடையிலே இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி தருகின்ற மரமாகவும் நிழலாகவும் கனியாகவும் இருப்பவனே. 
    • ஓடையிலே ஊறுகின்ற சுவைமிக்க நீராகவும், நீர் நிலையில் மலர்ந்த வாசம் வீசும் மலராகவும் 
    • மேடையிலே வீசுகின்ற மென் பூங்காற்றாகவும் அக்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருப்பவனே. 
    • உலக வாழ்வில் என்னையும் ஏற்றுக்கொண்ட தலைவனே! பொதுவிலே ஆடுகின்ற ஆட்டுவிக்கின்ற எம் அரசே! நான் தரும் பாமாலையை ஏற்று எனக்கு அருள் செய்வாயாக! 
    மையக்கருத்து 
    • இப்பாடல் இறைவனின் இனிய தன்மையைப் எடுத்துக் கூறுகிறது. 
    பொருள் நயம் 
    • இறைவன் உருவாக்கிய இயற்கை மகத்தானது என்னும் பொருளை உணர்த்துகிறது.  
    சந்த நயம் 
    • எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாவால் அமைந்துள்ளது 
    சொல்நயம் 
    • தீஞ்சுவைத் தண்ணீரே, 
    • சுகந்த மணமலரே. 
    • மெல்லியப் பூங்காற்றே - போன்ற நயம்மிக்க சொற்கள் காணப்படுகின்றன. 
    தொடைநயங்கள் 
     
    மோனைநயம் 
    • செய்யுளில், அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.   
    • கோடையிலே  மேடையிலே  டையிலே  ரசே 
    • கொள்ளும்  மெல்லிய  டுகின்ற  லங்கல் 
    எதுகைநயம் 
    • செய்யுளில், அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை 
    • கோடையிலே மேடையிலே 
    • டையிலே ஓடையிலே 
    இயைபு நயம் 
    • செய்யுளில், அடிதோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றிவரத் தொடுப்பது 
    • மலரே  தண்ணீரே 
    அணிநயம் 

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள அணி "உயர்வு நவிற்சி அணி" ஆகும். 
     

    III. மொழியோடு விளையாடு

    அ) கண்டுபிடித்து எழுதுக.

    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக……
     
    எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள் பாக்கள்:
     
    ஒன்று :
    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
     
    இரண்டு :
    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
     
    மூன்று :
    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்.
     
    நான்கு:
    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்காறு இயன்றது அறம்.
     
    ஐந்து:
    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் பூன்றிய தூண்.
     
    ஆறு:
    படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.
     
    ஏழு:
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
     
    எட்டு:
    கோயில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
     
    ஒன்பது:
    ஒன்பது என்ற எண்ணை திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை
     
    பத்து:
    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்
     

    ஆ) சொற்களைப் பிரிதுப்பார்த்துப் பொருள் தருக.

    கானடை
    கான் +அடை – காட்டைச் சேர்
    கான்+ நடை – காட்டுக்கு நடத்தல்
    கால் + டை – காலால் நடத்தல்
     
    வருந்தாமரை
    வரும் + தாமரை – வரும் தாமரை மலர்
    வருந்தா + மரை – துன்புறாத மான்
    வருந்து + ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும்
     
    பிண்ணாக்கு
    பிண் + நாக்கு – பிளவு பட்ட நாக்கு
    பிண்ணாக்கு – எண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள்
     
    பலகையொலி
    பல + கை + ஒலி – பல கைகள் எழுப்பும் ஒலி
    பலகை + ஒலி – மரப் பலகையின் ஒலி

    IV. செயல் திட்டம்

    அ) அகராதியில் காண்க.

    1)  ஆசுகவி – கூறியவுடன் பாடுவது
    2)  மதுரகவி – சுவையுடன் பாடுவது
    3)  சித்திரகவி – எழுத்தைச் சித்திரமாக வடித்து பாடுவது
    4)  வித்தாரக்கவி – விரிவாகப் பாடுவது
     

    ஆ) படிப்போம், பயன்படுத்துவோம்!

    1. Happiness - மகிழ்ச்சி
    2. Gratuity - பணிக்கொடை
    3. Sceptor - செங்கோல்
    4. Truth - வாய்மை
    5. Charity – ஈகை
     

    இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

           உலகை ஆளும் விந்தையான கைப்பேசியே
    உனைப்பார்க்கும் போதெல்லாம்
    எனை மறந்துப் போனேனே!
           உலக உறவுகளெல்லாம் நீ ஆனால்
    இருட்டறையில் உன் அரசாட்சியே!
    உலகை வென்றாய் ! மனிதநேயத்தை மறக்கச் செய்தாய்!
     

    V. நிற்க அதற்குத் தக...

            நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன்பயில்பவருடனோ,  உடன்பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது..... இந்த சமயத்தில் சினம்கொள்ளத்தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும்...நாம்  செய்யவேண்டுவன (அறங்கள்) அறங்கள் தரும் நன்மைைகள்
     
    விடைகுறிப்பு: 
     
    1. நல்ல சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல். - நல்ல நண்பர்களைப் பெறலாம்; எதிரிகளையும்  நண்பராக்கலாம்.
    2. ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்.- நம்மைப்பற்றி நன்மதிப்பு உயரும்
    3.பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல் - மகிழ்ச்சி உண்டாகும்.
    4. பிறருக்கு உதவுதல்       - மன நிறைவு பெறலாம்
    5. பெரியோர்களை மதித்தல் - வாழ்வில் உயரலாம்.
     

    VI. அறிவை விரிவு செய்

    1. அறமும் அரசியலும்– மு. வரதராசனார்
    2. தமிழரின் தத்துவ மரபு - அருணன்
    3. எண்ணங்கள். – எம்.எஸ். உதயமூர்த்தி
     
     
     
     
     
     விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     
     
    எஸ். ஜெயசெல்வன்
    பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
    பாணாதுறை மேனிலைப்பள்ளி
    கும்பகோணம்
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive