10th Tamil - Unit 5 Book Back Answers - Guide

  
 
 



 


    SSLC / 10th Tamil - Book Back Answers - Unit 5 - Download

    Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 5: 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1) கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
        கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
     
            ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
     
    2) "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
     
            இ) பழுப்பு   
     
    3) தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
     
    ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
     
    4) சித்திரை, வைகாசி மாதங்கள_________ காலம் என்பர்.
             
             ஈ) இளவேனில்
     
    5) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
     
              இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

    ஆ) குறு வினா

    1) சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
    • சோலைகள் , செண்பகக்காடு, பொய்கைகள், தடாகங்கள், நெல் வயல்கள்
     
    2)அயற்கூற்றாக எழுதுக.   "கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.
    •      கலைஞரைப் பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக்  கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார்.
     
    3) உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' - கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
    • உன் பொய்யான வாழ்வு முடியப்போகிறது.  காலனின் தூதர் கையில் படுத்து உறங்குவாய்.
     
    4) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
    • உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
    • உழவர் வயலில் உழுதனர்.
    • நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

    இ) சிறு வினா

    1)மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
    • குளிர்ந்த சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.
    • தாமரை மலர்கள்  விளக்குகள் போல் உள்ளன.
    • குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பன.
    • நீர் அலைகள் திரைச்சீலைகளாய் விரிகின்றன.
     
    2) கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.
     
    றங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே
          கற்றாடி போல வில்பிடித்த எமனின் தூதர் கையிலே
    தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட
         மகர யாழின் இசை போல் வண்டுகள் பாடுகின்றன.
    வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
    யானைப்படையைக்  கண்டு புறமுதுகாட்டி பயந்து ஓடும் வில் வீரனோ.
     
    3) தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
    • தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்.   
    • தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்.  
    • கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார்.
     
    4) 'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
    • நெய்தல் மக்கள் மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சுதல் தொழிலை நவீனமயமாக்கப் பட்டு பெரும் முதலீட்டில் செய்கின்றனர். 
    • மருத நிலத்தில் உழவுத்தொழில் நிகழ்கிறது. இத்தொழில் நவீன இயந்திரங்கள் மூலமாக நடைபெறுகிறது.
     

    ஈ) நெடு வினா

    1) போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர்- நாடகக் கலைஞர்- திரைக் கலைஞர்- இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
     
    போராட்டக் கலைஞர்:
     
           தனது 14 ஆம் வயதில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டித் ஊர்வலம் சென்றார்.
     
    பேச்சுக் கலைஞர்:
     
    மேடைப்பேச்சில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், நட்பு என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலரால் பாராட்டப்பட்டது. மாணவர்க்குப் பேச்சுப்பயிற்சி அளிக்கச் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் தொடங்கினார்.
     
    நாடகக் கலைஞர்:
              
        இவர் எழுதிய முதல் நாடகம் - பழநியப்பன். பிற நாடகங்கள் - மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்குமேடை.
     
    திரைக் கலைஞர்:
     
    எம்.ஜி.ஆர் நடித்த ராஜகுமாரி படத்திற்கு முழுவசனம் எழுதினார்.
     
    இயற்றமிழ்க் கலைஞர்
     
            கலைஞர் தாய்மை, புகழேந்தி , அணில்குஞ்சு முதலிய பல சிறுகதைகளையும், பொன்னர் சங்கர், ஒரே ரத்தம் முதலிய பல புதினங்களையும் எழுதினார்
     
    2) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
     
    அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
     
        கவியில் சிறந்தவர் கம்பர் -  சிறந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது. ”சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்” என்பது உண்மை. அவரது சந்த நயத்திற்கு ஒரு சான்று இதோ,
        
        குளிர்ந்த சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.
        தாமரை மலர்கள்  விளக்குகள் போல் உள்ளன.
        குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பன.
        நீர் அலைகள் திரைச்சீலைகளாய் விரிகின்றன.
     
    3) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.
     
    முன்னுரை:
     
            சா.கந்தசாமி எழுதிய  பாய்ச்சல் எனும்  கதையைச் சுருக்கமாக  இங்குக்  காண்போம்.
     
    அனுமாரின் ஆட்டம்:  
                             
            தெருமுனையில் பெருங்கூட்டம். அங்கு சதங்கை, மேளம், நாதசுர இசையுடன் ஒரு மனிதர் அனுமார் வேடமிட்டு ஆடினார்.  இசைக்கேற்ப மக்கள் மகிழும் வண்ணம் ஆடினார். அழகு என்ற சிறுவன் அதைப்பார்த்தான். அவனுக்கு அந்த ஆட்டம் பிடித்திருந்தது.
     
    அழகுவின் ஆர்வம்: 
     
            அழகுக்கு அனுமாரைப்போலவே ஆடுவதற்கு ஆர்வம் வந்தது.  அனுமார் மூஞ்சியை எடுத்துமாட்டிக் கொண்ட அழகு அனுமார் ஆட்டத்தைச் சிறப்பாக ஆடினான். இதனைக் கண்ட அனுமார் மனதில் நிறைவு உண்டாயிற்று. கலைக்கு வாரிசு கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார்.
     
    முடிவுரை:
                 பாய்ச்சல் கதையைச் சுருக்கமாக  இங்குக்  கண்டோம்.
     

    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    சிறு நண்டு மணல்மீது 
    படமொன்று கீறும் 
    சிலவேளை அதைவந்து 
    அலை கொண்டு போகும் 
    கறிசோறு பொதியோடு 
    தருகின்ற போதும் 
    கடல்மீது இவள் கொண்ட 
    பயமொன்று காணும்! 
     
    வெறுவான வெளி மீது 
    முகில் வந்து சூழும்
    வெறி கொண்ட புயல் நின்று
    கரகங்கள் ஆடும் 
    நெறிமாறு பட நூறு 
    சுழிவந்து சூழும் 
     நிலையான கரை நீரில் 
    அலைபோய் உலைந்தாடும்! 
    - மகாகவி (இலங்கை)
     

    ஆ) மொழி பெயர்க்க.

            Kalaignar Karunanidhi is known for his contribution to Tamil literature. His contributions cover a wide range. Poems, letters, screenplays, novels, biography, historical novels, stage- plays, dialogues and movie songs. He has written kuraloviam for thirukural, tholkaappiya poonga, poombukar as well as many poems essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the kuraloviam, in which kalaignar wrote about thirukkural through the construction of valluvar kottam he gave an architectural presence to thiruvallur, in Chennai. At Kanyakumari Karunanidhi constructed a 133-foot-high statue of thiruvalluvar in honour of the scholar. 
     
    விடைகுறிப்பு: 
     
    பன்முகக் கலைஞர் 

            தமிழ் இலக்கியத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கு மகத்தானது. தமிழின் எல்லாத் துறைகளிலும் அவரின் பங்களிப்பை நாம் காணலாம். எடுத்துக்காட்டாக கவிதை, கடிதம், திரைக்கதை, புதினம், வாழ்க்கை வரலாறு, சரித்திரக்கதைகள்,  மேடைநாடகம், உரையாடல் மற்றும் திரைப்படப்பாடல்கள். 
    மேலும் திருக்குறளுக்காகக் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார் மற்றும் பல கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. 
    இலக்கியங்கள் மட்டுமல்லாமல், கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ்மொழிக்குத் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.  குறளோவியம் என்ற நூலின் மூலமாக திருக்குறளைப் பற்றி எழுதிய கலைஞர். சென்னையில் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டத்தையும் அமைத்தார். 
    மேலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையையும் கலைஞர் கருணாநிதி அமைத்தார்.
     

    இ) தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்.

    • ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும். 
    • எ.கா. 
    • அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார். 
    • ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர். 
    • தொடர்சொற்றொடர், ஒரு எழுவாய் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும். 
    • எ.கா. 
    • அ) இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார். 
    • ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார். 
    • கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத்தொடர்களும் கலந்து வரும். 
    • எ.கா. 
    • அ) மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான். 
    • பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் - முதன்மைத் தொடர் 
    • மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் - துணைத் தொடர்
     

    ஈ) தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

    1) இன்னாசியார் புத்தகங்களை வரிசைைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில்  அடுக்கிவைத்தாார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தாார்.
    (தொடர் சொற்றொடராக மாற்றுக.)
    • இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்து, கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
     
    2. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத்  தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.
       (கலவைச் சொற்றொடராக மாற்றுக.)
    • லைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு, எழுத்துவழியாகத்  தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.
     
    3. காற்று மாசுபாட்டை க் குறைக்க  குபபை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
    (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.)
    • காற்று மாசுபாட்டைக் குறைக்க  குப்பை மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.    
    • பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும்.
    • மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
     
    4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக )
    • ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.

    உ) பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக.

    கோல்ட் பிஸ்கட் - தங்கக்கட்டி   
    வெயிட் - எடை
    யூஸ்   - பயன்படுத்தி
    எக்ஸ்பெரிமெண்ட் - சோதனை.  
    ரிப்பீட் -  மீண்டும்
    ஆல் தி பெஸ்ட் - வாழ்த்துகள்    
    ஈக்வலாக  - சரிசமமாக
    பட்   - ஆனால்     
    ஆன்சரை    - விடையை
     

    ஊ) பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்க.

    அ) நிகழ்த்து கலைகள் எத்தகைய சிறப்புகளைக் கொண்டவை ? 
    • கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன நிகழ்த்து கலைகள். 
    • கிராமப்புற / சிற்றூர் மக்களின் கலை. 
    • அழகியல் பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை இவை. 
    ஆ) மரபார்ந்த கலை வடிவங்கள் யாவை? 
    • தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக் கொண்டு ஆடும் கரகாட்டமும் தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலை வடிவங்கள் ஆகும். 
    இ) நிகழ்த்துகலைகளில் முத்தமிழும் உள்ளடங்கி உள்ளன - கருத்தை விளக்குக. 
    • இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்து காணப்படுகிறது. 
    ஈ) பத்தியில் இருந்து இரண்டு வினாக்களை உருவாக்குக. 
    • அ) தலையில் / தோளில் கருவியைச் சுமந்தபடி ஆடும் ஆட்டங்கள் யாவை? 
    • ஆ) வேடம் கட்டி ஆடும் ஆட்டங்கள் யாவை ? 
    உ) நிகழ்த்துகலைகளைப் பாதுகாக்க நம்மால் செய்ய இயலும் எவையேனும் இரண்டு செயல்பாடுகளைக் குறிப்பிடுக. 
    • அ) ஊர்த்திருவிழாக்களின் போது நிகழ்த்து கலைகளை நடத்துவோம். 
    • ஆ) பள்ளி விழாக்களின் போது நிகழ்த்து கலைகளை நடத்துவோம்.

    எ) பின்வரும் செய்தியைப் படித்து வினாக்கள் உருவாக்குக.

    யார் இவர்? 
         
            தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். "நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடக முறையான கூத்துக் கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். 
     
            இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். இவர்தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு. 
     
    விடைகுறிப்பு:
    வினாக்கள் 
    • 1. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் யார்? 
    • 2. ந.முத்துசாமியின் நாடகங்கள் எவற்றைப் பேசின? 
    • 3. கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பெற்ற விருதுகள் யாவை? 
    • 4. நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர் யார்?
     

    ஏ) கட்டுரை எழுதுக.

    உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
     
    முன்னுரை:
     
              எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக்  காண்போம்
     
    கலைத்திருவிழா:
     
    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இத்திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. தலையில் கரகம் வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.புலி வேடமிட்டு ஆடும் புலியாட்டம் காண அழகாக இருந்தது.
     
    வண்ண மயமான அரங்குகள்:
     
        நாங்கள் குடும்பத்துடன் சென்றோம்.  கலைத்திருவிழாவில் வண்ண விளக்குகள் இருந்தன.இவற்றைக் காண கண் கோடி வேண்டும். பல்வேறு விளையாட்டுகள் இருந்தன.  நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்
     
    முடிவுரை:
     
             எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக்  கண்டோம்.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

    1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
    2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம்  சிவந்தது.
    3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
    4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள்  வெயில் பரவிக்கிடக்கிறது.
    5. வெயிலில் அலையாதே; உடல் கறுத்து விடும்.
     

    ஆ) பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

    (தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, பார்ப்பவர், விருது, தோற்பவர், கவிழும், விருந்து)
     
    1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
       வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
     
    2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
      சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்
     
    3. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்
       பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்
     
    4. வாழ்க்கையில் தோற்பவர் மீண்டும் வெல்வர்- இதைத் 
       தத்துவமாய்ப் பார்ப்பவர் முயற்சி மேற்கொள்வர்.
     
    5. கைதட்டலே கவிஞர்க்கு விருது - அவையோரின்
      ஆர்வமே அவருக்கு விருந்து.
     

    இ) அகராதியில் காண்க.

    1. தால் - நாக்கு, தாலாட்டு .
    2. உழுவை - புலி, ஒரு வகை மீன். 
    3. அகவுதல் - ஒலித்தல், அழைத்தல். 
    4. ஏந்தெழில் - மிகுந்த அழகு, அரசன். 
    5. அணிமை - அண்மை, அருகில், பக்கத்தில்.
     

    ஈ) காட்சியை கண்டு கவினுற எழுதுக. 

             
            கலைகள் 
    ஆடவர் ஆடிடும் 
    அற்புதக் கலை! 
    ஒய்யாரமாய் ஆடிடும் 
    ஒப்பற்றக் கலை! 
    மக்களை மகிழ்விக்கும் 
    மாசற்றக் கலை! 
    கண்போரை மகிழ்விக்கும் 
    காவியக் கலை!

    IV. செயல் திட்டம்

    a

    V. நிற்க அதற்குத் தக!

        தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக. 
     
    விடைகுறிப்பு: 
     
    1. என் துறையில் வல்லுநரான பின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன். 
     
    2. என் துறையில் இருக்கும் கலைச் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவேன். சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் 
     
    3. சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தமிழில் பகிர வழி வகை செய்வேன். 
     
    4. அலுவலகங்களில் ஆண்டுக்கு இருமுறை தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்துவேன். 
     
    5. எனது துறை சார்ந்த அறிவார்ந்த நூல்களைத் தமிழில் எழுதி வெளியிடுவேன். 
     
    6. நான் பணிபுரியும் அலுவலகத்தில் செந்தமிழ் மொழியில் உரையாடுவேன்.
     

    அ) படிப்போம், பயன்படுத்துவோம்!

    1. Playwright  - நாடக ஆசிரியர் 
    2. Storyteller  - கதை சொல்லி 
    3. Screenplay - திரைக்கதை 
    4. Acsthetics  - அழகியல், முருகியல்
     

    VI. அறிவை விரிவு செய்

    தக்கையின் மீது நான்கு கண்கள்  - சா. கந்தசாமி 
    திருக்குறள் கலைஞர் உரை  - கலைஞர் மு. கருணாநிதி



     
     
     
     
     விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     
     
    எஸ். ஜெயசெல்வன்
    பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
    பாணாதுறை மேனிலைப்பள்ளி
    கும்பகோணம்
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive