10th Tamil - Unit 2 Book Back Answers - Guide

  
 
 



 


    SSLC / 10th Tamil - Book Back Answers - Unit 2 - Full Guide

    Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 2: 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

     விடைக்குறிப்பு:          ) வானத்தையும் பேரொலியையும்

    2. செய்தி 1-   ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

       செய்தி 2 -  காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

       செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

     விடைக்குறிப்பு:      ) செய்தி 1, 3 ஆகியன சரி

    3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

    ) கொண்டல் - 1. மேற்கு

    ) கோடை - 2. தெற்கு

    ) வாடை - 3. கிழக்கு

    ) தென்றல் – 4. வடக்கு

     விடைக்குறிப்பு:        ) 3.1.4.2  

    4. மகிழுந்து வருமா?' என்பது -------

     விடைக்குறிப்பு:         ) எழுவாய்த்தொடர்

    5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

     விடைக்குறிப்பு:          ) வேற்றுமை உருபு

     

    ஆ) குறு வினா

    1. நமக்கு உயிர் காற்று. காற்றுக்கு வரம் மரம் - மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக

          காற்று உயிருக்கு நாற்று

          உயிர்களின் உயிர்மூச்சு - காற்று

          காற்றைப் பெற மரங்களை வளர்ப்போம்.

    2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்

    சிரித்துச் சிரித்துப் பேசினார்'

    3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக

           கட்டுரையைப் படித்த

    4. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

         முதுகினால் சூரியனை மறைக்கும்,   தாகத்தினைத்  தீர்க்கும்

    5. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

        கிழக்குகொண்டல்.           மேற்குகோடை

        வடக்குவாடை.                      தெற்கு - தென்றல்

    இ) சிறு வினா

    1. உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

        உயிராக நான், ஆறாக நான், குளமாக நான்

        உயிர்வாழ  அவசியம் நான்

        உலகில் மூன்று பங்கு நான்,

        நானின்றி உலகில்லை, எத்திசையும் நான்

    2. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

        நெருப்புப் பந்து போல புவி உருவாகியது. தொடர் மழையால் பூமி மூழ்கியது. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் உள்ள ஐம்பூதங்கள் தோன்றின.

    3. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக

          பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர். 

          கேட்டுப் பாடினர் - வினையெச்சத்தொடர்

          கேட்ட பாடலில் - பெயரெச்சத்தொடர்

          சிறுவினாக்களைக் கேட்டார் - வேற்றுமைத்தொடர்

     

    ஈ) நெடு வினா

    1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

    முன்னுரை:

    காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

    காற்று மாசுபாடு :

    குப்பைகள், நெகிழிப் பைகளை எரிப்பதால், மிகுதியாகப் பட்டாசு வெடிப்பதால், குளிர்சாதனங்களை மிகுதியாகப் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுகிறது.

    காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:

         அதிக மரங்களை  வளர்க்க வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்னாற்றால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.  உயரமான புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.

    முடிவுரை:

       காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்

     

    2. 'பிரும்மம்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினை விவரிக்க.

    முன்னுரை:

        பிரபஞ்சன் இயற்றிய சிறுகதை பிரும்மம்   இக்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் காண்போம்.

    முருங்கை வளர்க்க ஆசை :

        பிற உயிர்களைத் தம் உயிர்போல நேசிக்கும் ஒரு குடும்பம் புது வீட்டிற்குக் குடிபோனது.அந்த வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது. அங்கு என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பசு வளர்க்கலாம், காய்கறிச் செடிகள் வளர்க்கலாம் எனப் பல திட்டங்கள். கடைசியில் முருங்கை மரம் வளர்க்கலாம் என்று அப்பா முடிவு செய்தார்.

    அப்பாவும் முருங்கையும் :

       அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர்.  ஒவ்வொருநாளும் முருங்கையின் வளர்ச்சியைக் கண்டு ரசித்தனர் . அன்று முதல் அம்மரம் அவர்கள் வீட்டில் ஓர் உறுப்பினராக மாறியது . அனைவரும் பயன்பெற்றனர்  மகிழ்ச்சியாக இருந்தனர் . காற்றில் முருங்கை சாய்ந்தது. மிகவும் வருந்தினர்.  மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்

    முடிவுரை:

        'பிரும்மம்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் கண்டோம்

     

    3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

    வளரும் விழி வண்ணமே வந்து

       விடித்தும் விடியாத காலைப் பொழுதாக

    வினைந்த கலை அன்னமே

       நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

    துந்த இனந் தென்றலே - வளர்

        பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

    பொலிந்த தமிழ் மன்றமே

    -கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.

     

    விடைக்குறிப்பு:

    திரண்ட கருத்து : காற்றைப் பாராட்டல்

    மோனை நயம்:    மலர்ந்தும் - மலராத

    எதுகை நயம்:  நதியில் - பொதிகை

    இயைபு நயம்:   வண்ணமே - அன்னமே - மன்றமே

    அணி நயம்:   உவமையணி


     

    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க


    அந்த இடம் 
    காற்றே ! வா
    உன்னைப் பாடாமல் 
         இருக்க முடியாது 
     
    ஏனெனில்
    பாட்டின் மூல ஊற்றே
    நீதான் 
                        .............
                        .............
     
    பொய்கையிடம் போனால்
    குளிர்ந்து போகிறாய்
    பூக்களைத் தொட்டால்
    நறுமணத்தோடு வருகிறாய்
    புல்லாங்குழலில் புகுந்தால்
    இசையாகிவிடுகிறாய்
     
    எங்களிடம்
            வந்தால் மட்டுமே
                        அழுக்காகி விடுகிறாய்
     
    மரங்களின்
        ஊமை நாவுகள் 
        உன்னிடம் மட்டுமே 
        பேசுகின்றன
     
    கடல் அலைகள்
            உன்னோடு மட்டுமே
            குதித்துக் கும்மாளமிடுகின்றன 

    வயலின் பச்சைப் பயிர்கள்
            நீ வந்தால் மட்டுமே
            ஆனந்த நடனம்
            ஆடுகின்றன
     
    நீ என்ன குதூகலமா?
            கொண்டாட்டமா?
            கோலாகலமா? 

    நெடுநாட்களாகவே
            எனக்கொரு சந்தேகம் 
     
    விளக்குகளிலிருந்து
            பறிக்கும் சுடர்களை
    பூக்களிலிருந்து
            திருடும் நறுமணத்தை
    வீணையிலிருந்து
            கவர்ந்த இசையை
    எங்கே கொண்டு போய்
            ஒளித்து வைக்கிறாய்? 

    - அப்துல் ரகுமான்.
     

    ஆ ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:

    ) இயற்கைசெயற்கை

             செயற்கையை விட இயற்கை சிறந்தது

    ) கொடு - கோடு

              கொடுப்பதற்குக்  கோடு இடக் கூடாது

    ) கொள் - கோள்

              கோள்களை அறிந்து கொள்

    ) சிறு - சீறு

    சிறு பூனையும் சீறும்

    ) தான் - தாம்

    தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்

    ) விதி - வீதி

            விதியால் வீதிக்கு வந்தான்

     
     

    இ) மொழி பெயர்ப்பு

     
    The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
     
    விடைக் குறிப்பு:
     
    தங்கச் சூரியன் அதிகாலையில் எழுந்து இருளைப் போக்க தனது பிரகாசமான கதிர்களைத் தொடங்குகிறான். பால் மேகங்கள் தங்கள் அலைந்து திரியத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள் தாள வாத்தியத்தில் தங்கள் காலை மெல்லிசைகளைச் சுழற்றத் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் நறுமணம் காற்றை நிரப்புகிறது. காற்று எங்கும் மெதுவாக வீசுகிறது, எல்லாவற்றையும் இனிமையாக்குகிறது.
     

    ஈ) செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:

    பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

       பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர்.

      மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாநிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

     அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்்ததே காட்சிப்்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

      பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

      இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

                   - கோவை.இளஞ்சேரன்

    1. மலரில் சில எளியவை ஆகக் காரணங்கள் யாவை?

            பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன.

    2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகிஎன்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

         காயாகி, கனியாகி, அரிசியாவது மூங்கில் அரிசி

    3. பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடர்களை நான்கினை எடுத்தெழுதுக.

    மனத்தை ஏற்றும் - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

    கண்ணிற்குக் காட்சி - நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

    மரத்தின் மீதேறி   - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

    மக்களது விருப்பில் - ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.



    உ) வாழ்த்து மடல் எழுதுக.

    மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

    வாழ்த்து மடல்

    ,

    24-05--2026

    அன்புள்ள நண்பா/தோழி,

              மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுகிறேன். வாழ்த்துகள்! நீ இன்னும் நிறைய பரிசு பெற வேண்டும்.

     

    இப்படிக்கு,

    உன் அன்பு நண்பன்,

    உறைமேல் முகவரி:

          ,

          86, கம்பர் நகர்,

          தஞ்சை


    ஊ) பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.


    பாரதியின் வசன நடை - சிட்டுக்குருவி 

        சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக் கண்கள்;சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து: அழகிய மரங்கள் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு: கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தால் ஆகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை : துளித்துளி கால்கள்: இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்; இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.  - இதுபோன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக. 

        முயல்: சிறிய கண்கள்; சின்னத் தலை: சிறிய மூக்கு; நீண்ட காதுகள்: அழகிய வெண்மை பட்டு போர்த்த வயிறு: துளித்துளி கால்கள்: சாம்பல் நிறத்தால் ஆகிய பட்டு போர்த்த முதுகு: தத்தித் தாவி குதித்து ஓடிடும்; எங்கள் வீட்டு முயல் குட்டி.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

    1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும் - நறுமணம்

    2) பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும். - புதுமை

    3) இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. -  காற்று

    4) நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். - விண்மீன்

    5) ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்.   - காடு


    ஆ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக

    1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது.

               காற்றின் பாடல்

    2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

             மொட்டின் வருகை

    3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த  தென்றலில் வண்டுகள் மிதந்துசென்று மலர்களில் அமர்கின்றன.

    மிதக்கும் வாசல்

    4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

       உயிர்ப்பின் ஏக்கம்

    5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

      நீரின் சிலிர்ப்பு
     
       6. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம்.

           வனத்தின் நடனம்


    இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


    இயற்கையைச் சுவாசித்தோம்

    இடர்கள் இன்றி இயல்பானோம்

    இயற்கையான மரங்களை வீழ்த்தி

    இயற்கையை அழித்ததனால்

    உயிர்வாழத் தூய உயிர்வளி இல்லை

    இனி உயிர்வாழ உயிர்வளியை

    முதுகில் சுமக்கும் நிலைவருமே.

    IV. செயல் திட்டம்

    தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

    அ) அகராதியில் காண்க

    1.அகன்சுடர்-   உயர்ந்த தீபம்

    2. திருவில் - வானவில்

    3. கட்புள் - விழித்திருக்கும் பறவை

    4 .ஆர்கலி- கடல், மழை, பறவை

    5. கொடுவாய்- வளைந்த வாய்.

    V. நிற்க அதற்குத் தக:

    அ) வானொலி அறிவிப்பு

    புதிய புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆ) புயலின் போது

    புயலின்போது வெளியே செல்லவேண்டாம்.

    வெளியேற நேர்ந்தால் ஆரம்பகட்ட எச்சரிக்கையின்போதே வெளியேறவும்

    தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

    மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே தங்கவும்

    வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும்.

    காற்று அடிப்பது நின்றாலும் எதிர்த்திசையிலிருந்து மறுபடி வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்றடிப்பது முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம்.

    மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

    வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொலைவிலும் மரங்கள், மின்கம்பிப் பாதைகள், நீர் வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகியும் வாகனத்தின் உள்ளேயே தங்கியிருக்கவும்.

    புயல் முன்னெசரிக்கை:

    1.      புயல் வந்தால் பாதுகாப்பாக இருப்பேன்

    2.     புயல் வந்தால் உணவை எடுத்து வைப்பேன்

    3.     புயல் வந்தால் குடிநீரை எடுத்து வைப்பேன்

    4.     புயல் வந்தால் மின்சாரம் துண்டிப்பேன்

    மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
     

    இ) படிப்போம்; பயன்படுத்துவோம்! 

    Storm - புயல்
    Land Breeze - நிலக்காற்று
    Tornado – சூறாவளி
    Sea Breeze -கடற்காற்று
    Tempest – வன்புயல்
    Whirlwind - சுழல்காற்று

     

    VI. அறிவை விரிவு செய்

     
    குயில்பாட்டு
    . – பாரதியார்
    அதோ அந்தப் பறவை போல. முகமது அலி
    உலகின்மிகச்சிறியதவளைஎஸ். ராமகிருஷ்ணன்.

    அ) பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் படிவத்தை நிரப்புதல்

    1. பெயர்.                                           : கவின்

    2. பாலினம்                                       : ஆண்

    3. பிறந்த நாள் மற்றும் வயது.  : 16-03-2010 / 14

    4 தேசிய இனம்                               : இந்தியன்

    5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : சேதுராமன்

    6. வீட்டு முகவரி.                                     : 17/45, பாரதி நகர், தஞ்சை

    7. தொலைபேசி /அலைபேசி எண் : 9443740120

    8. 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்: 450/500

    9. தாய்மொழி                                                : தமிழ்

    10. பயின்ற மொழிகள்.                              : ஆங்கிலம், இந்தி

    11. தட்டச்சு. : முதுநிலை தமிழ்

    12. கணினி : MS ,Excel

     மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மைையென உறுதிகூறுகிறேன். தங்கள்

    நிறுவனத்தில் ...எழுத்தர்...பணியினைத் தந்தால் எனது பணியைச் சிறப்பாகவும் உண்மைையாாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

    இப்படிக்கு,

    xxxxx

     
    ஆ) உங்கள் கிரமத்திற்கு நூலக வசதி வேண்டி பொதுத் துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

    பூம்பாறை.
    10.07.2025
    அனுப்புநர்
            செ.தமிழரசன்,
            50, அன்னை இல்லம்,
            காந்தி தெரு,
            பூம்பாறை,
            திண்டுக்கல் மாவட்டம் 625 001.
     
    பெறுநர்
            பொது நூலக இயக்குநர் அவர்கள்,
            தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
            சென்னை 600 002.
     
    ஐயா,
            பொருள்: நூலக வசதி வேண்டுதல்-சார்பு.
            வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள் தோறும் சென்று வருகின்றோம். 

        எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
     
    இப்படிக்கு,
    தங்கள் உண்மையுள்ள,
    செ.தமிழரசன்.
    உறைமேல் முகவரி
    பெறுநர்
    பொது நூலக இயக்குநர் அவர்கள்,
    தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
    சென்னை 600 002.
     
     

     
     
     
     
     
     
     
     விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     
     
    எஸ். ஜெயசெல்வன்
    பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
    பாணாதுறை மேனிலைப்பள்ளி
    கும்பகோணம்
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive