அரசுப் பள்ளிகளில் இணைய வழியாக ABL முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்க்கு பள்ளிகல்வி துறை அனுமதி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 23, 2021

அரசுப் பள்ளிகளில் இணைய வழியாக ABL முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்க்கு பள்ளிகல்வி துறை அனுமதி


அரசுப் பள்ளிகளில் இணைய வழியாக ABL முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்க்கு பள்ளிகல்வி துறை அனுமதி 



அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம்- 2021-2022 ஆம் கல்வி ஆண்டு- புதியதாக 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab, | Mobile Lab, Lab on a Bike and YIL Programs தொடங்கிடவும் , கடந்த கல்வி ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு 12 மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் மேற்கண்ட திட்டங்களை இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதித்தும் , 2021-22 ஆம் கல்வி ஆண்டு- அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதித்து பள்ளிகல்வி துறை ஆனை வெளியிட்டுள்ளது 



பள்ளிகல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைபடி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், இராமநாதபுரம், விருதுநகர், தேனி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கரூர் ஆகிய Science Centre, Mobile Science Lab, | Mobile Lab, Lab on a Bike and YIL Programs தொடங்கிட அனுமதி வழங்கியுள்ளார் .



CSE - Permission to Agastya International Foundation 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்தாரால் ஏற்கனவே பள்ளிகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை, இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதி வழங்கியுள்ளார்.



அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் (whats app ,google meet ) செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கியுள்ளார்



Post Top Ad