தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தள்ளிவைப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 3, 2021

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தள்ளிவைப்பு



இம்மாதம் நடைபெறுவதாக இருந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில்நுட்பத்தேர்வுகள் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்தல் 2021 - பணிக்கான மதிப்பூதியம் அனுமதித்து அரசாணை வெளியீடு. ( மதிப்பூதிய விவரம் )
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தொழில்நுட்பத் தேர்வுகள் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந் நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தொழில் நுட்பத் தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுவதாக தொழில்நுட்பக்கல்வித் துறை அண்மையில் அறிவித்தது.
சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் - தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இந்நிலையில், இத் தேர்வுகள், கரோனா தொற்று அதிகரிப்புகாரணமாக தள்ளிவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Post Top Ad