உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 24, 2021

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.



உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள்

சிறைவாசம்அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவிதொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர்புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில்ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவிஇறக்கம் செய்து, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னைஉயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்தஉயர் நீதிமன்றம்,


புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர்பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்குமாற்றப்பட்டார்.

இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்தஉயர் நீதி

மன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதிஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல்2020 வரை பணிவரன்முறை செய்யக்

கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனுஅளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு முன்னிலையில் விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்தமனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும்” என தொடக்கக் கல்விஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும், “மனுதாரர் தனது மனு, மொபைல்எண், இ-மெயில் முகவரிபோன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடி

யாக வழங்க வேண்டும். அவரதுமனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகுறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்குகுறுஞ்செய்தி, இ-மெயில் அல்லதுபதிவு தபால் மூலம் தகவல்தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளைஇந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும்நேரிடும்” எனவும் எச்சரித்தார்.





Post Top Ad