போலியோ சொட்டு மருந்து முகாம் - தமிழகஅரசு செய்தி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 29, 2021

போலியோ சொட்டு மருந்து முகாம் - தமிழகஅரசு செய்தி


செய்தி வெளியீடு எண் : 63 நாள் : 29.01.2021 செய்தி வெளியீடு போலியோ சொட்டு மருந்து முகாம் போலியோ சொட்டு மருந்து முகாம் 31.01.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் . 


தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள் , அங்கன்வாடி மையங்கள் , சத்துணவு மையங்கள் , பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் . இம்மையங்களில் 70.26 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன . யுனிசெஃப் , உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன . முக்கிய அம்சங்கள் 1 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் . 2. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 31.01.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் . 3. போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் , 4. சமூக இடைவெளி கடைப்பிடித்தல் , முகம் கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயமாகும் . 5. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும் . 6. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் / இருமல் அல்லது மற்ற தொற்று கோவிட் தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது . ' 7. மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் . சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . 8. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் . 9. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும் . 10. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை கண்டு விரலில் மை வைக்கப்படும் . 11. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் , யீமருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . 12. புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் . 13 , போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000 - க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் . 14. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள் , இரயில் நிலையங்கள் , சோதனைச் சாவடிகள் , விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் ( Transit Booths ) கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . 15. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 16 , போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் , அங்கண்வாடிப் பணியாளர்கள் , ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் , 17. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது . இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் , குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும் . எனவே , பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பிளை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் , இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் " மற்றும் வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

Post Top Ad