6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!!


தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, தற்போதைய சூழ்நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும். தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive