CBSE பள்ளிகளுக்கான இணைப்பு நடைமுறைகளில் மாற்றம்!



சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு:சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு அந்தஸ்து பெறும் பள்ளிகளுக்கான நடைமுறைகளில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

புதிய இணைப்புகள், இணைப்பை புதுப்பித்தல், இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு, தனித்தனியே தீர்வு காணப்பட உள்ளது.இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினருக்கு, 'ஆன்லைன்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோருக்கு, 9, 10ம் தேதியும்; இணைப்பு அந்தஸ்தை உயர்த்திக் கொள்வோருக்கு, மார்ச் 12; இணைப்பைநீட்டிப்போருக்கு, மார்ச் 13லும், ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை, www.cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive