நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக உள்ள 57 வயதை கடந்த வர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 21, 2021

நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக உள்ள 57 வயதை கடந்த வர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும்!



தமிழ் நாடு ஆசிரி யர் சங்கத்தின் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது . தொடர்ந்து சங்க மாநில செயலாளர் வி.சரவணன் நிருபர்களி டம் கூறியதாவது : அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக உள்ள 57 வயதை கடந்த வர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும்.

வரும் 27 , 28 ஆகிய தேதிக ளில் தொடக்கக்கல்வித் துறையில் நடைபெறும் பதவி உயர்வுக்கான கலந் தாய்வை பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னரே நடத்த வேண்டும் . பட்டதாரி ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னரே தாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் . கடந்த 2019 ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடன டியாக பணி நியமனம் .

கர்ப்பிணிகள் , நோயாளிகள் , மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர் தல் பணிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது போல் , மே மாதம் 3 ம் தேதி பிளஸ் 2 தேர்வு நடை பெறும் நிலையில் , பிளஸ் 2 பாட ஆசிரியர்களுக் கும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் . 9 முதல் 12 ம் வகுப்பு வரை சனிக்கிழமைகளில் மாணவர் குறைந்துள்ள தால் , அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண் டும் . இவ்வாறு அவர் கூறி னார் .

Post Top Ad