தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, March 28, 2021

தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News



உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்குஇதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்?

தேர்தல்பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூடதராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்இரு நாள்கள் பணி செய்தாக


வேண்டும் என்றால் இது எப்படிநியாயமாகும்?

தமிழ்நாட்டில்சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்ஆணையம் தமிழக அரசிடம் கேட்டதொகை எவ்வளவு தெரியுமா? 621 கோடிரூபாய். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகபாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாலும், நோய்த்தொற்றை தவிர்க்க வாக்குச் சாவடிகளின்


எண்ணிக்கை 68,000-லிருந்து 95,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாலும் இம்முறை செலவினங்கள்அதிகரிக்கும் என்று கடந்த ஜனவரியிலேயேதமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹூ குறிப்பிட்டிருந்தார்.



வாக்காளர்பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு வாக்குப்பதிவு பெட்டியை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுவரை இதன்செலவினங்களில் அடங்கும். தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும்அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்குசம்பளம், இன்னபிற இத்யாதி செலவுகள்எல்லாம் இதில் அடங்கும்.

கோடிக்கணக்கில்செலவு செய்து தேர்தலை ஆணையம்நடத்தினாலும், அதை களத்தில் இருந்துநடத்திக்காட்டுவது அரசுப் பள்ளி ஆசிரியர்களும்ஊழியர்களும்தான். ஆனால் அவர்களுக்கான உணவுவசதியையோ, பாதுகாப்பு வசதியையோ, போக்குவரத்து வசதியையோ தேர்தல் ஆணையம் செய்துதருவதே இல்லை. `ஒவ்வொரு முறைதேர்தல்


வரும்போதும், போருக்குச் சென்று செத்துப் பிழைத்துவருவதுபோலத்தான் இருக்கிறது எங்களது நிலை' என்றுஆசிரியர் தரப்பு வெடித்துக் குரலெழுப்புகிறது.

`என்ன பிரச்னைகள்?' என்று கேட்டதுதான் தாமதம். கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர்படபடவென பொரிந்து தள்ளிவிட்டார். அவர் சொன்னதை அப்படியேஇங்கே தருகிறேன்.

அதற்குமுன்பு வாக்குப்பதிவு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறை குறித்த சிறுவிளக்கத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

ஒவ்வொருமாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியாகமாவட்ட ஆட்சியர் செயல்படுவார். அவரது மேற்பார்வையில் அவரது


மாவட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படும். தேர்தல் பணியை கட்டாயம் ஏற்றுக்கொண்டேஆகவேண்டும். மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்களுக்கு `மெமோ’ வழங்கப்படும்.

ஒரு தொகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களும், பணியாளர்களும் அதே தொகுதிக்குள் தேர்தல்பணி செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில்ஒன்று. அதனால் அவர்கள் பழக்கப்படாதவேறொரு தொகுதிக்கு தேர்தல் பணிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். அது நகரமாக இருக்கலாம். கிராமமாக இருக்கலாம். மலைப்பகுதியாகக்கூட இருக்கலாம்.

தேர்தலுக்கென்று5 நாள்கள் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய முதல் மூன்றுவாரங்களில் மூன்று பயிற்சி வகுப்புகள்நடத்தப்படும். எப்படி தேர்தலை நடத்தவேண்டும், வாக்குப்பதிவு பெட்டியை எப்படி இயக்க வேண்டும், பிரச்னை ஏற்பட்டால் எப்படி சரி


செய்யவேண்டும், வாக்காளர் பட்டியலில் எப்படி வாக்காளர் பெயரைசரிபார்ப்பது. வாக்களிக்க அனுமதிப்பது, வாக்குப்பதிவு முடிந்ததும் எப்படி முத்திரையிடுவது எனஅனைத்தும் சொல்லித் தருவார்கள். வாக்களிக்கும் நாள், அதற்கு முந்தையநாள் என இரு நாள்கள்களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.

தேர்தலுக்குமுதல் நாள் ஆட்சியாளர் அலுவலகத்தில்காத்திருந்து, தற்காலிகப் பணியாணை பெற்று வாக்குச்சாவடிஇருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மறுநாள்வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் எடுத்துச்செல்லும் வரை அங்கேயே காவல்இருக்க வேண்டும். அதன் பிறகே தேர்தல்பணி நிறைவடையும். கொரோனா பரவல் காரணமாகஇம்முறை தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரித்திருக்கிறார்கள். இதுவும் ஆசிரியர்களிடமும் அரசுஊழியர்களிடமும் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இனி அந்த ஆசிரியை சொன்னதுஅப்படியே இங்கே...

``கொரோனாநோய்த்தொற்று பரவும் காலத்தில் பெண்ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்து, மூன்றுநாள்கள் பயிற்சி முடித்து, ஏப்ரல்5-ம் நாள் ஆணையினை பெறகாலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம்செல்ல வேண்டும். அங்கிருந்து சொந்தப் பயண ஏற்பாட்டில்மதியம் 12 மணிக்குள்


வாக்குச்சாவடியை அடையவேண்டும். வாக்குச்சாவடி அடைவதற்கு அன்று மாலை ஐந்துமணி ஆகிவிடும். ஆனால் போடுவார்கள் பாருங்களேன்ஒரு சட்டம்... மதியம் 12 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்க வேண்டும் என்று. அதனால் அவசர அவசரமாக எப்படியோஒருவழியாக வாக்குச்சாவடிக்கு வந்தடைவார்கள்.

உண்ண உணவில்லாமல், தங்க எவ்வித வசதியும்இல்லாமல், போதிய அளவிலான பாதுகாப்பில்லாமல், குடிக்க குடிநீர்கூட இல்லாமல், அன்று இரவு முழுதும்கொசுக்கடியில் தூக்கம் வருகிறதோ இல்லையோதேர்தல் பொருள்களை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.

அடுத்தநாள் காலையில் 5.00 மணிக்கு எல்லாம் வாக்குச்சாவடியில்50 மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஆரம்பிக்க வேண்டும். 50 ஓட்டுகள் பதிவுசெய்ய ஏஜென்ட்கள் யாரும் வராமல் எப்படித்துவங்குவது? அவர்களுக்கு யார் சொல்வது?” என்றகேள்வியை முன்வைத்தார்.

மாதிரிவாக்குப்பதிவு என்பது, வேட்பாளர்களின் முகவர்களைவைத்துக்கொண்டு 50 வாக்குகளை பதிவு செய்து காண்பிக்கவேண்டும். வாக்கு அளிக்கும் சின்னத்தில்வாக்கு விழுகிறதா? இவருக்குத்தான் வாக்களித்தோம் என்ற உடனடி பதிவிறக்கச்சீட்டு வருகிறதா? பதிவுச் சீட்டுகளின் எண்ணிக்கையும்வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? இவற்றையெல்லாம்பரிசோதித்துக் காட்ட வேண்டும். முடிவுகளைச்சொல்லவும், மீண்டும் இயந்திரத்தை தயார் செய்வதற்கு அதிகநேரம் எடுக்கும். இதற்குப் பெயர்தான் மாதிரி வாக்குப்பதிவு.

மீண்டும்அந்த ஆசிரியை தொடர ஆரம்பித்தார்.

``தேர்தல்நேரம் காலை 7 மணி முதல்மாலை 7 மணி வரை. அதாவது12 மணி நேரம். அதுவும் ஒருசிலவாக்குச்சாவடிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருப்பார்கள். இடையில்இயற்கை உபாதைகளுக்குக்கூட செல்ல வழியில்லாமல் பணியாற்றவேண்டும்.

அதிலும்காலை, மதியம் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில்எங்களுக்கான உணவை யார் தருவார்கள்என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மண்டலஅலுவலர்கள் மூலமாக, அல்லது உள்ளூர்கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகஇதுவரை உணவு வழங்கியதாக சரித்திரம்இலலை.

நகர்ப்புறங்களில்ஒரு சில இடங்களில், ஒருசில நல்ல நண்பர்கள், நல்லவாக்குச்சாவடி முகவர்கள், கிராமங்களில் நம்மீது அக்கறை கொண்டஒரு சில நல்ல உள்ளங்கள், நமக்காக உணவு தருவார்கள். பெரும்பாலானஇடங்களில் உணவுக்குப் பெரும்பாடுதான்.

வாக்காளர்களின்நலன் மட்டுமே கருதி அன்றுபொது விடுமுறை விட்டும்கூட, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதுவங்கவிருக்கிறது என்றதும், ஒரு சில வாக்காளர்கள்`நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், விரைவில்வாக்குப்பதிவை துவங்குங்கள்' என்று உரிமையுடன் வருவார்கள். ஏழு மணிக்கு வாக்குச்சாவடி வாக்குப்பணி துவங்கும் முன் நாம் எத்தனைசீர் முறைகளை செய்ய வேண்டும்என்பது அவர்களுக்குத் தெரியாது.

மாதிரிவாக்குப்பதிவு முடித்ததும் அதனை கிளியர் செய்வதற்குகுறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். பிறகு அதனைசீல் செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அத்தனையும் ஒருவிதமான படபடப்புடன் செய்ய வேண்டும். எந்தஒரு


தவறும் நேராத வண்ணம்செய்ய வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குள் வரும் ஒவ்வொரு பத்திரிகை, போலீஸ்காரர், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவான விவரங்களை வழங்குவதுஅவசியமாகிறது.

இந்த2021 தேர்தலில், கடைசி ஒரு மணிநேரம் நோய்த் தொற்று பாதித்தநோயாளிகளுக்கான நேரம் என்று சொல்கிறார்கள். வாக்காளர்களின் 100% வாக்கு, வாக்களிப்பவர்களின் நலன்மட்டுமே பார்க்கத் தெரிந்த தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் அலுவலர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தால் மாலை5 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு நிறைவுபெறச் செய்து இருக்கும்.

எங்களுக்காககுரல் கொடுக்க எந்தக் கட்சிக்காரர்களும்வரப்போவதில்லை. அங்கு எந்த சங்கத்தின்பேச்சும் எடுபடப் போவதில்லை. தேர்தல்முடிந்து அத்தனை விபரங்களையும் 17சி-ல் பதிவு செய்துமுகவர்களுக்கு அளித்துவிட்டு முத்திரைப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டுமிகுந்த பசியுடன், எப்போது மண்டல அலுவலர்வருவார் என்று விடிய விடியகாத்திருந்து, அனைத்தையும் அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பும் இன்றி இரவு வேளைகளில்பெண் ஆசிரியர்கள் வீடு திரும்ப வேண்டும்.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இந்தப் பணியை ஐந்தாண்டுகளுக்குமூன்று முறை போர்க்களத்திற்கு செல்வதுபோல், போர் வீரர்களைப்போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தாலும் எங்களது பரிதாபமான நிலையை, எங்களுக்கு உள்ள இடர்பாடுகள் பற்றிமுன்னெடுத்துச் செல்ல, எங்களது சிரமங்களைக்குறைக்க எவரும் இல்லை” என்றார்காட்டமாக.

விருதுநகரைச்சேர்ந்த ஆசிரியை ஒருவர் பகிர்ந்தகொண்ட தகவல் இன்னும் வருத்தமாகஇருந்தது.

``அறிமுகமேஇல்லாத இடத்தில் தேர்தல் பணி போடுவார்கள். அங்கு சென்றால் ஆண் ஆசிரியர்களும் இருப்பார்கள். பெண் ஆசிரியர்களும் இருப்போம். அரசுப் பள்ளிகளின் நிலைஉலகறிந்ததாயிற்றே. அதிலும் கழிப்பிட வசதிகளைக்கேட்கவா வேண்டும். ஆண்கள் எனில் சமாளித்துக்கொள்வார்கள். பெண்கள் நாங்கள் எங்கே செல்வது?

விடிகாலையில்4 மணிக்கு எழுந்து, அந்த இருட்டில் புழு, பூச்சி, பாம்பு, பல்லி இருக்குமோஎன்று பயந்து பயந்து சென்றுவிட்டுவருவோம். ஆண்கள் எழுவதற்குள் குளித்துமுடித்து பள்ளியிலேயே ஆடை மாற்றிக்கொள்வோம். இத்தனையையும்தாங்கிக்கொள்ளலாம் என்றாலும்கூட, மாதவிடாய் தினங்கள் என்றால் சிரமங்கள் இன்னும்அதிகரிக்கும்.

இவ்வளவுசெலவு செய்யும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காகஅப்பள்ளிகளில் கழிப்பிட வசதியை புதிதாக ஏற்படுத்தவேண்டாம். இருப்பதை சரிசெய்து கொடுத்தால் எங்களுக்கு மட்டுமல்ல,


  அப்பள்ளிகளில் படிக்கவரும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது மொபைல் டாய்லெட்வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

முதல் நாளே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவோம். வாக்குச் சாவடிக்குள் மதியமெல்லாம் சென்றுவிட வேண்டும். அங்கே ஒரு ஏற்படும்செய்து வைத்திருக்க மாட்டார்கள். நாம்தான், டேபிள் எடுத்துட்டு வாங்க... பேனை சரி செய்து கொடுங்க... வெளிச்சம் போதவில்லை, அது இல்லை இதுஇல்லை என்று ஒவ்வொன்றாகப் பார்த்துசெய்ய வேண்டும். முடிப்பதற்குள் இருட்டிவிடும்.

நகரமென்றால்கடைகளில் சொல்லி உணவு வாங்கிக்கொள்ளலாம். கிராமம் எனில் அதோ கதிதான். பல முறை நான் பட்டினியாகத்தான்இருந்திருக்கேன். தேர்தல் பணிகளின்போது. சர்க்கரைகுறைபாடு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தப்பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கெல்லாம் மிகவும் சிரமம்.

வாக்குப்பதிவுமுடிந்து எல்லோரும் சென்ற பிறகு, பெட்டிக்குசீல் வைத்து அந்தப் பெட்டியைஎடுத்துச்செல்லும்வரை நள்ளிரவானாலும் நாய் போல காத்துக்கிடக்கவேண்டியதுதான். பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டால், `நீ இருந்தாலும் சரி, செத்தாலும் சரி எங்களுக்கென்ன...' என்பதுபோலதேர்தல் பணிக்குழு எங்களை அந்த இடத்திலேயேகழற்றிவிட்டுவிடும்.

அந்த நள்ளிரவில் எப்படி நாங்கள் எங்களதுஊருக்குப் பயணிப்பது, பத்திரமாக வந்து சேர்வது? வயதானஅப்பா, அம்மா, பள்ளி செல்லும்பையன் என எனது குடும்பத்தையேஇருநாள் தனியே விட்டுவிட்டுத்தான் இப்பணிக்குவந்தாக வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஆனால்கூட எங்களால்செல்ல முடியாது. காரணம் இது தேர்தல்பணி. எங்களுக்குப் பிடிக்காத பணி என்றால் இந்தத்தேர்தல் பணிதான்” என்றார்.

நீலகிரியிலுள்ளதலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்துசொன்னது யோசிக்க வைக்கக்கூடியதாக இருந்தது.

``சமவெளிப்பகுதிகள்எனில் ஆசிரியர்கள் ஏதாவதொரு வாகனத்தைப் பிடித்து சென்று விடுவார்கள். மலைப்பகுதியென்றால்யோசித்துப் பாருங்கள். மிருகங்களின் பயம் இருக்கும். வேறுவழியே இல்லை. நாங்கள் போய்த்தான்ஆகவேண்டும். என்னவோ செய், ஏதோசெய், ஆனால், நீ அங்கேஇருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம்சொல்லிவிடும்.

பட்டதாரிஆசிரியரை, அங்கே தலைமை ஆசிரியருக்குமேலதிகாரியாகப் போட்டுவைக்கும் அவலமெல்லாம் நடக்கும். இம்முறை சமையலர், அலுவலகஉதவியாளர் போன்றவர்களை எல்லாம் தேர்தல் பணியில்ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு சரியாக எழுத வராது. அவர்களைக்கொண்டு 17சி படிவத்தை நிரப்பஇருக்கிறார்கள். இது எங்கு போய்முடியுமோ தெரியவில்லை. இரண்டு நாள்களுக்கும் எங்களுக்குசோறு, தண்ணி இருக்காது. எவ்வளவோசெலவு செய்யும் தேர்தல் ஆணையம், தனதுபணியாளர்களுக்கு உணவைத் தரலாம். அடிப்படைவசதிகளை செய்து தரலாம்” என்றார்.

சோழிங்கநல்லூரிலுள்ளஆசிரியரிடம் பேசியபோது, ``வாத்தியாருங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க. இந்த வேலைய செஞ்சா என்னவாம்என்று குரல் கொடுப்பவர்கள்தான் இங்கேஅதிகம். எங்களுக்குத் தேர்தல் பணி சம்பளமேவேண்டாம். எத்தனையோ வேலையற்ற பட்டதாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணியை ஒதுக்கிக்கொடுத்தால்அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல, அரசுக்கு எந்தப் பணி என்றாலும்ஆசிரியர்கள்தான் இளைத்தவர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பா, ரேஷன் கடை கணக்கெடுப்பா, மக்கள்தொகை பதிவேடா, வாக்காளர் சேர்ப்பு முகாமா, தடுப்பூசி முகாமா... இழுத்துட்டு வா அந்த அரசுப்பள்ளிஆசிரியரை... என்றுதான் சொல்வார்கள். கல்விப்பணி பாதிக்குமே ... மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்களே... அதைப் பற்றியெல்லாம் கவலைஇல்லை இவர்களுக்கு.

இம்முறைகொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் கடைசி ஒரு மணிநேரம், அதாவது 6 முதல் 7 மணி ஓட்டுபோடலாம்என்கிறார்கள். அப்போது நாங்கள் முழுகவசத்தோடு இருக்க வேண்டும். அவர்களும்முழு கவசத்தோடு வரவேண்டும் என்கிறார்கள். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு கொடுக்கலாமே. அவர்களால் நோய் பரவலும் கட்டுப்படும். காகிதத்தில் கொரோனா உயிரி 10 நாள்களுக்குமேல் இருக்காது. தேர்தல் முடிவுகள் 25 நாள்கள்கழித்துத்தானே வெளிவரப்போகிறது" என்று வருத்தப்பட்டார்.

திருநெல்வேலியில்இருக்கும் அரசு ஊழியர் ஒருவரிடம்பேசியபோது, ``என்னோடு பணியாற்றும் ஊழியர்ஒருவர் 15 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவிற்காக சிகிச்சை மேற்கொண்டார். உடலும் மனமும் தயாராகவில்லை. அவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கிஇருக்கிறார்கள். உடல்நிலை மோசமாக இருக்கும்போது பணிக்குஎப்படி செல்லமுடியும் என்று கேட்டதற்கு, சம்மந்தப்பட்டஅதிகாரிகள், ``அதெல்லாம் முடியாது நீங்க பணிக்கு போய்த்தான்ஆகவேண்டும்." என்று கோபமாக பேசிஅனுப்பியிருக்கிறார்கள். அவருக்கு வந்த ஆணையை ரத்துசெய்ய அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்" என்று தனது வருத்தத்தைப் பதிவுசெய்தார்.

புதுக்கோட்டையிலுள்ளஆசிரியர் ஒருவர், ``பல லட்சம் செலவுசெய்து பள்ளிக்கு வர்ணம் அடித்து வைத்திருப்போம். தேர்தல் விழிப்புணர்வு வாசகம், வாக்காளர் விவரம்என்றெல்லாம் போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்துவிடுவார்கள். பணி முடிந்ததும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதை மறுபடியும் நாங்கள்தான்சரிசெய்தாக வேண்டும். இதற்காக தனியே மூங்கில்தட்டிகளை வைத்தால் என்ன? டிஜிட்டல் முறையில்கொடுத்தால்தான் என்ன?” என்றார்.

`தேர்தல்பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூடதராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்இரு நாள்கள் பணி செய்தாகவேண்டும் என்றால் இது எப்படிநியாயமாகும். பணியாற்ற மாட்டோம் என்று எப்போதும் ஆசிரியசமூகம் சொன்னது இல்லை. அடிப்படைவசதிகளை, நள்ளிரவில் எங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதிகளைசெய்து கொடுங்கள் என்றுதானே கேட்கிறோம். 600 கோடிக்கு மேல் செலவு செய்யும்தேர்தல் ஆணையம் இதையும் செய்துதருவதுதானே நியாயமாக இருக்கும்?' என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இம்முறையேனும்தமிழக தேர்தல் ஆணையம் இந்தச்பிரச்னையை சரிசெய்யுமா?

- மோ.கணேசன்


Post Top Ad