தஞ்சாவூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு.


 


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சத்து 75ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  93 பேருக்கும் மற்றும் ஆசிரியர்கள் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள 439 பள்ளிகளில் 9,10,12-ம் வகுப்பு பயிலும் 2லட்சத்து 75ஆயிரத்து 185 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ள மாவட்ட நிர்வாகம் அதற்காக 14 கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.


கொரோனா உறுதி செய்யப்பட்ட பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive