புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்குகான மிக முக்கிய பயனுள்ள தகவல்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 4, 2021

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்குகான மிக முக்கிய பயனுள்ள தகவல்கள்



முதுகலை ஆசிரிய சகோதர சகோதரிகளே புதிதாக பணியேற்பு செய்துள்ள வணக்கங்கள் 

 
நீண்ட நாள் , நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடா முயற்சியால் , அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ள வேதியியல் மற்றும் பொருளியல முதுகலை ஆசிரியர்களே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ..... தங்களின் பணியினை சிறப்புடன் செய்யவீர்கள் வாழ்த்துகள் ...... தங்கள் பள்ளி தலைமையாசிரியரும் - அலுவலக இளநிலை உதவியாளரும் வழிகாட்டுவார்கள் .. சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்து இருப்பினும் எனக்குத் தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .. . 
 
 இணை இயக்குநர் அவர்கள் வழங்கியுள்ள அசல் பணி நியமன ஆணையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் - பள்ளித் தலைமையாசிரியர் வழங்கியுள்ள பணியேற்பு அறிக்கையின் நகலினை பெற்றுக் கொள்ளுங்கள் .



CPS Number  பெற விண்ணப்பிக்க வேண்டும் :

 
முதலில் தாங்கள் தன்பங்கேற்பு ஒய்வூதிய எண் பெற விண்ணப்பிக்க வேண்டும் ( CPS Number ) . ) . - CPS Application Form இணைத்துள்ளேன்- முதல் மூன்று பக்கங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக பூர்த்தி செய்து Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . இணையதள முகவரி http://cps.tn.gov.in/ - விண்ணப்பித்த 3-4 நாட்களில் CPS - Number Allotted letter online இல் பெற்றுவிடலாம் - CPS - Number , இருந்தால் தான் IFHRMS மூலம் ஊதியம் பெற இயலும் - PAN Card , வங்கி கணக்கு எண் வைத்துக் கொள்ளுங்கள் ( SBI Bank இருந்தால் நன்று அல்லது தாங்கள் பள்ளி சார்ந்த கருவூலம் தொடர்புடைய வங்கி எனில் நன்று ) -  
 

 சான்றிதழ்கள் உண்மை தன்மை பெற விண்ணப்பிக்க வேண்டும் :

 
10 , 12 வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையினை பெற கருத்துறுக்களை பள்ளித் தலைமையாசிரியர் வழியாக நேரடியாக அரசுத் தேர்வுத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக் வேண்டும் ( ஒவ்வொரு மாவட்டத்தில் AD ( Examination ) அலுவலகம் உள்ளது ) ( DEO அலுவலகம் வழியே சென்னைக்கு விண்ணப்பிக்க கூடாது ) - உண்மைத்தன்மை பெற , இளங்கலை , முதுகலை , கல்வியியல் பட்டப் படிப்பிற்கு பட்டச் சான்றிதழ் ( convocation - Degree certificate ) நகலினை உரிய கட்டணத்துடன் உரிய படிவத்தில் தலைமையாசிரியர் முகப்புக் கடித்துடன் விண்ணப்பிக்க வேண்டும் . 
 
கட்டண விபரம் மற்றும் விண்ணப்பப்படிவம் பற்றிய விபரங்களுக்கு சார்ந்த பல்கலைக்கழக இணையதளத்தினைப் பார்க்கவும் . ( அரசுப் பணி எனில் சென்னை பல்கலைக்கழகத்தில் உண்மைத்தன்மை பெறக் கட்டணம் கிடையாது , அது போன்று அரசுப் பணி எனில் பல பல்கலைக்கழகத்தில் கட்டணங்கள் குறைவு , தனியார் எனில் கட்டணம் அதிகம் )- வெளி மாநில பட்டப் படிப்பு எனில் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் ( Other State Degree certificate - Evaluation by DEO ) தற்போதைய நிலையில் 10.03.2020 க்கு பின் பணியேற்ப்பு செய்யும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு கிடையாது . - பணியில் சேரும் முன்னர் உயர்கல்வி பெற்று இருப்பின் அந்த உயர்கல்விக்கும் உண்மைத் தன்மை பெற்றுக் கொள்ளுங்கள் . தங்களுடன் TRB தேர்வு எழுதிய மற்ற பாட நண்பர்கள் 10.03.2020 முன் ( பிப்ரவரி 2020 இல் ) பணியில் சேர்ந்து ஊக்க ஊதிய பெற வாய்ப்புள்ள நிலையில் அதைக் காரணம் காட்டி வருங்காலங்களில் நீங்களும் நீதிமன்றத்தை நாடி உரிய பலன்களை பெறமுயற்சிக்கலாம் . - தாங்கள் உயர்கல்வி படித்துக் கொண்டு இருப்பின் அந்தப் படிப்பினை தொடர உரிய அனுமதியினை பெற விண்ணப்பித்து படிப்பினை தொடர அனுமதியை எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்ளுங்கள் . - தாங்கள் , பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கும் அனைத்து விண்ணப்பங்களையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . -  
 
தங்கள் பெயர் படிப்பு பதவி பள்ளியின் பெயருடன் Rubber Stamp Seal செய்து வைத்துக் கொள்ளுங்கள் , செய்முறைத் தேர்வு | Attestation செய்ய பயன்படும் . 
 

தங்களுக்கு பெறத்தகுதியுடைய பணப்பலன்கள் - :

 
Pay - 36900 ( Level 18 ) 
- DA - 17 % ( 6273 ) 
- MA - HRA பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும் ( 550,1500,1800,2600,4200 ) 
- CCAL மாநகராட்சி பணியிடங்களில் மட்டும் - 300 பிடித்தங்கள் 
CPS - 4317 ( 10 % ( Pay + DA ) ) 
 FBF - 60 SPF - 70 N
HIS - 180 ( கணவன் - மனைவி தமிழக அரசு ஊழியர் எனில் பிடித்தம் வேண்டாம் ) - பணியேற்ற நாள் முதல் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் பருவம் - 
தகுதிகாண் பருவத்தில் மருத்துவ விடுப்பு அனுமதி இல்லை ( 2 ஆண்டுகள் வரை ) - 
தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு அனுமதி உண்டு - தகுதிகாண் பருவத்தில் தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு - ( ஆண்டிற்கு 12 நாட்கள் )

பணிக்கலாச்சாரத்தை கடைபிடியுங்ககள் :

 
* பள்ளி அருகிலோ அல்லது தொலைவிலோ ... மகிழ்ச்சியாக பணியாற்றங்கள் 
* மோசமான பள்ளி என்று எதுவும் இல்லை அவரவர் பார்க்கும் பார்வையில் தான் மாறுபாடுகள் .. 
* சவால்கள் நிறைந்த பள்ளி எனில் அதை சமாளிக்கும் தகுதியும் திறமையும் தங்களுக்கு உண்டு என நம்புங்கள் 
* மாணவர்களுக்கு கற்றல் - கற்பித்தல் பணியே தங்களுக்கு தலையாய பணி இருப்பினும் நேரம் கிடைக்கும் போது மாணவர் நலன் சார்ந்த அலுவலகப் பணியையும் கற்றுக் கொள்ள முயலுங்கள் - மதிப்பும் மரியாதையும் உயரும் 
* தலைமையாசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் சமமே ... அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள் ... புன்முறுவல் நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் - மகிழ்ச்சியாக வைத்திருக்கும் . 
* தங்களை போல தங்கள் மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பாடுபடுங்கள் 
* பாடம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களின் வாசிப்பை கைவிடாதீர்கள் - தொடர் வாசிப்பு தங்களை செழுமைபடுத்தும் . 
 * கல்லுாரி பேராசிரியர் பணி , UPSC- CIVIL SERVICE Exam , Group - I Exams , DEO Exam , உயர் பதவிக்கான போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்யுங்கள் . ( முறையான அனுமதி பெற்று ) 
* ஒடுகின்ற நீர் தான் நதியாக மாறி கடலை சென்றடைகிறது 
 
. வாழ்த்துகள் . என எங்கள் மாணவர் நலன் ஆசிரியர் நலன் சார்ந்து தங்களுக்கு உதவிட TNPGTA இயக்க தோழமைகள் என்றும் தயாராக இருக்கிறார்கள் . 
 
TNPGTA மாநில சட்டச் செயலாளர் . 
க.செல்வக்குமார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( வேதியியல் )
 நகராட்சி மேல்நிலைப் பள்ளி மேலக்காந்திநகர் 
சாத்துார் - 626203 
விருதுநகர் மாவட்டம் . 
selva7pc@gmail.com
 



Post Top Ad