22 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 8, 2021

22 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா :



பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை(ஜன.4) பிகாரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், முங்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சதர் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் குமார் பாரதி கூறியதாவது,

பள்ளி உள்ள அசர்கஞ்ச் பகுதியை கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் பரிசோதனை செய்வதற்கு மருத்துவக்குழு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.

Post Top Ad