அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, August 18, 2019

அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காகமாணவர்களுக்கு வாரம்தோறும் 2பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்றுபள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர்இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியசுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள்இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்தபள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடுவலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும்பலப்படுத்தும் வகையில், நூலகங்களில்புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்குவாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்கவேண்டும். நூலகங்களை மேற்பார்வையிடசிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும். அந்த ஆசிரியருக்கு குறைந்தபாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்கள்கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும்மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக்கூடாது. அதற்கு மாறாக சேதமடைந்தபுத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானியநிதியைப் பயன்படுத்த வேண்டும். தினசரிநாளிதழ்கள் வாங்க இந்த நிதியைப்பயன்படுத்தக் கூடாது.மாணவர்கள் தங்கள்விருப்பப்படி, புத்தகங்களைத் தேர்வு செய்துபடிக்க வழி செய்வதுடன், ஆண்டுதோறும்பள்ளிகளில் ஏப்ரல் மாதம் தேசிய நூலக வாரம்கொண்டாடப்பட வேண்டும். மாதத்துக்குஒருநாள் இறைவணக்க கூட்டத்தில்மாணவர்களை தங்கள் படித்த புத்தகம்குறித்து  பேச வைக்க வேண்டும். மாவட்டமைய நூலகங்களுக்குச் சென்று பார்வையிடவைத்தல், முன்னாள் மாணவர்கள், தொண்டுநிறுவனங்கள் உதவியால் நூலகத்தைமேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை  திறம்படமேற்கொள்ள வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது

Post Top Ad