இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 30, 2019

இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்..

இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்..


டெல்லி: கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் இதோ:

- பாங்க் ஆஃப் பரோடா

- யூகோ

- இந்தியன் ஓவர்சீஸ்

- பாங்க் ஆஃப் இந்தியா

- பஞ்சாப் & சிந்த் வங்கி

- மகாராஷ்டிரா வங்கி

- சென்ட்ரல் வங்கி

- எஸ்பிஐ

- பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் வங்கி +

யுனைடெட் வங்கி

- கனரா வங்கி + சிண்டிகேட்

- யூனியன் வங்கி + ஆந்திரா + கார்ப்பரேஷன்

- இந்தியன் + அலகாபாத் வங்கி

இவைதான் அந்த 12 வங்கிகளாக இருக்கும். கடந்த வருடம், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை, பாங்க் ஆஃப் பரோடாவுன் இணைக்கப்பட்டன. எனவே, அவை பாங்க் ஆஃப் பரோடா என்றே அழைக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு.. நிதி நிலைமையை சீராக்குமா!

Post Top Ad