புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்றுபள்ளிகள் திறக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றுகாரணமாக கடந்த 6 மாதங்களாகபள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நாராயணசாமிஅறிவித்தபடி, பள்ளிகள் திறக்கப்பட்டுஇருக்கைகள் சுந்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி ஏற்கெனவேதெளிக்கப்பட்டன. இதையடுத்து மத்தியஅரசின் வழிகாட்டுதல் அடிப்படையில்புதுவையில் இன்று முதல் மாணவர்கள்ஆசிரியர்களிடம் சந்தேகங்களைநிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள்திறக்கப்பட உள்ளன.
9 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று
10 மற்றும் 12-ம் வகுப்புகளும், நாளை 9, 11-ம் வகுப்புகளும்திறக்கப்படுகின்றன. பள்ளிகளில்கொரோனா பரவலைத் தடுப்பதற்கானபாதுகாப்பு நெறிமுறைகளைபின்பற்றப்பட வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment