பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில்மாணவர்கள் சேர்வதற்கானதரவரிசைப் பட்டியலை 28ஆம் தேதிஉயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வுஅக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பும்கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 3 ந்தேதி மற்றும் 4ந் தேதி ஆகிய நாட்களில்இணையதளத்தில் பதிவேற்றம்செய்தனர்.அதனைத்தொடர்ந்துஆன்லைன் வாயிலாக நடைபெற்றகலந்தாய்வில்
முன்னாள் ராணுவத்தினரின்வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டில்ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 134 மாணவர்களும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் உள்ள 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 மாணவர்களும் விளையாட்டு பிரிவுமாணவர்களுக்கான 500 இடங்களில்357 மாணவர்களும் இடங்களை தேர்வுசெய்துள்ளனர் அந்த வகையில் சிறப்புபிரிவினருக்கு மொத்தமுள்ள 7150 இடங்களில் 598 மாணவர்கள் மட்டுமேஇடங்களை தேர்வு செய்துள்ளனர் 6552 இடங்கள் காலியாக உள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்குள் தங்களுக்குஒதுக்கப்பட்ட இடத்தினைமாணவர்கள்.தாங்கள் தேர்ந்தெடுத்தஇடத்தினை உறுதி செய்ய வேண்டும்என தமிழ்நாடு மாணவர் சேர்க்கை குழுதெரிவித்துள்ளது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாகஉள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்குகொண்டுசெல்லப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment