இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு


இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சேர்க்கை ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது. 
பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://onlineadmission.ignou.ac.in/admission என்ற வலைதளம் மூலமாக சேர்க்கை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். 
அல்லது, 044 - 26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக மண்டல மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive