மத்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப வந்துள்ள மருத்துவ இடங்களில் 7.5% இட ஒதுக்கீட்டில் யாருக்கு கலந்தாய்வில் முன்னுரிமை?: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

மத்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப வந்துள்ள மருத்துவ இடங்களில் 7.5% இட ஒதுக்கீட்டில் யாருக்கு கலந்தாய்வில் முன்னுரிமை?: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு:



மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று நவம்பர் 20ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை   விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது.இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்களை கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 
இதையடுத்து இந்த 60 மாணவர்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெளிவு படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை  மீண்டும் நாளைக்கு (இன்று)தள்ளி வைத்தார். . ‘‘ அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில்  கிடைக்கும் 26 இடங்களை கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள  மனுதாரர் உள்ளிட்ட 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு  நடத்தப்படும்’’.

Post Top Ad