கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன ??? Vikatan ARTICLE - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 29, 2020

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன ??? Vikatan ARTICLE


கடன்களுக்கு வங்கிகள் எப்படிவட்டிவிகிதம்கணக்கிடுகின்றனதெரியுமா? - #LoanVenumaSir -


7 வங்கிகளில், குறிப்பாக தனியார்வங்கிகளில் அல்லதுவங்கிசாரா நிதிநிறுவனங்களில் நீங்கள்கடன்வாங்கும்போது ஒரு விஷயத்தில்மிகவும்கவனமாக இருக்க வேண்டும். அதுவட்டி விகிதக் கணக்கு.


கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள் மற்றும்தனியார் நிதிநிறுவனங்களில் எதில்தனிநபர் கடன்வாங்கினால் வட்டிகுறைவாக இருக்கும்என்று கேட்டிருந்தோம். இந்தக்கேள்விக்கு சரியான பதிலைஅதாவது, பொதுத்துறைவங்கிகள்தான் எனப் பலரும்சரியாகச்சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில்சொன்னஅனைவருக்கும் பாராட்டுகள்.

அது மட்டுமல்ல, கடந்தஅத்தியாயத்தைப் படித்தமதுக்கூர் மணிஎன்பவர் ஒருஆலோசனைகேட்டிருக்கிறார். அவர்கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்டமுடியவில்லை...

``நான்தனியார் கட்டுமானநிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோதுதனியார் வங்கியில் எனதுபெயரில்சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்தபிணையும்வைக்காமல் தனிநபர் கடன்வாங்கினேன். தற்போதுகொரோனாவின் காரணமாகக் கடந்தஒன்பது மாதமாகவேலையின்றிஇருக்கிறேன். இந்த நிலையில, கடன்தவணையைக் கட்ட வேண்டும்என்றுவீட்டுக்கு வந்து தொந்தரவுசெய்கின்றனர். நான் என்ன செய்யவேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்றுகேட்டிருக்கிறார். அவருக்கானஎனது பதில்...

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கிவகுத்துள்ளவழிகாட்டுதலின்படி, கடன்தவணை தள்ளிவைப்பு(Loan Moratorium) வசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனாபிரச்னையின் காரணமாகஅனைத்து 

வங்கிகளும் தங்கள்வாடிக்கையாளர்களுக்கு மார்ச்மாதம்முதல் ஆகஸ்ட் மாதம் வரைஆறுமாத காலம் மாதத்தவணைகளை தள்ளிசெலுத்தும் வசதியைக்கொடுக்குமாறுரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டிவசூலிக்கப்பட்டாலும்சாதாரணவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும்உள்ளவித்தியாசத் தொகையை மத்தியஅரசுசலுகையாக வழங்குகிறது. இதுகொரோனா காலத்துக்குமுன்பு தாங்கள்கடனை ஒழுங்காகசெலுத்திஇருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கிவிதிமுறைகளுக்குஉட்பட்டு வங்கிகள்இந்த வாய்ப்பைவாடிக்கையாளர்களுக்குத்தருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்என்பதே நான் அவருக்குஅளிக்கும்பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவுவட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார்வங்கிகளில் அல்லதுவங்கிசாரா நிதிநிறுவனங்களில் நீங்கள்கடன்வாங்கும்போது ஒரு விஷயத்தில்மிகவும்கவனமாக இருக்க வேண்டும். அதுவட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில்தனிநபர்கடன் ரூ.2 லட்சத்துக்குவிண்ணப்பிப்பதாகவைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம்24% எனில் (தற்போதைய சூழ்நிலையில்தனிநபர் கடன் வட்டிவிகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரைதரப்படுகிறது), நம்மில்பலர் மாதம்இரண்டு வட்டிஎன்ற முறையில் நம்மிடம்வட்டி பணம் வசூலிக்கிறதுஎன்றுநினைக்கிறார்கள்.

அதாவது, வருடத்துக்கு 24% வட்டிஎன்றால் மாதத்துக்கு2% வட்டி என்றுகணக்கிடுகிறார்கள். இதுதவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்குமூன்றுவருடங்களுக்கு மாதாந்தரத் தவணைரூ.7,847 என்றுவரும். அப்படி மூன்றுவருடங்களுக்குச்செலுத்தினால், மொத்த வட்டி செலுத்தியதொகைரூ.82,476 என்று வரும்.

இதுவே நாம் நடைமுறையில்பேசும்இரண்டு வட்டி என்றுகணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டியமொத்தவட்டி தொகை மூன்றுவருடங்களுக்குரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாதவட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்துநாம் சாதாரணமாக வட்டிகணக்கிடுவதற்கும் வங்கிகள்வட்டிகணக்கிடுவதற்கும் உள்ளவித்தியாசத்தை நீங்கள்உணரலாம்.


கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி


இதில் தேசியமயமாக்கப்பட்டவங்கிகளில் ஒவ்வொரு மாதமும்வட்டியைமட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போதுவேண்டுமானாலும்பகுதி 

பகுதியாகவோ, மொத்தமாகவோசெலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறுபகுதி பகுதியாகச்செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறுவட்டித்தொகை குறையும். இத்தகையகடன் திட்டம்பெரும்பாலும் தங்க நகைக்கடன்களில்வழங்கப்படுகிறது.

ஒரே விதமான கடனுக்கு, வட்டிவிகிதம்என்பது ஒவ்வொரு வங்கிகள்மற்றும்வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குஇடையேமாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும்மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லதுநிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல்வருமானம், சொத்து மதிப்பு, கடன்தகவல் அறிக்கையில் எந்தபாதகமானவிஷயங்களும்இடம்பெறாததுஆகியவற்றைக் கொண்டு வட்டிவிகிதம்தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்குசாதகமாக இருந்தால், வட்டிவிகிதம்குறைவாக இருக்கும்.

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்னஅம்சங்கள்மட்டுமல்லாமல், இப்போதுவந்திருக்கும் ஃபின்டெக்(Fintech) நிறுவனங்கள் தங்களின்சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன்அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டுபயணங்கள், கடன் தேவையின்அவசரம்ஆகியவற்றைக் கொண்டுதங்களுக்கு கொடுக்கப்படவேண்டியகடன் அளவையும் வட்டிவிகிதத்தையும்தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள்எந்தவங்கியிலோ, வங்கிசாரா நிதிநிறுவனத்திலோ கடன்வாங்குவதற்குமுன்னால், அந்த வட்டிவிகிதம்தான்தங்களுக்குகிடைக்கக்கூடிய குறைந்த வட்டிவிகிதம்என்று உறுதிப்படுத்திக்கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ்மூலம் கடன்தரும்நிறுவனங்களிலிருந்துமுடிந்தவரை கடன் பெறாமலேஇருப்பதுநல்லது.

இப்போதுமாதாந்தரத் தவணைகணக்கீட்டு முறையையும்வட்டிவிகிதங்கள் பற்றியானதகவல்களையும் பற்றி ஓரளவுக்குதெளிவடைந்துஇருப்பீர்கள் என்றுநம்புகிறேன்.

Post Top Ad