பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 30, 2020

பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


பள்ளிக் கல்வி - முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா - 2019 அக்டோபர் , 15 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்க கோருதல் - சார்பு .

பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் கடிதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் , 15 - யினை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுமாறும் , இது தொடர்பாக பார்வை 1 - ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை செயல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டதையடுத்து பார்வை 3 - ல் காணும் கடிதம் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது .

தற்போது பார்வை 1 - ல் கண்ட கடிதத்தில் நடைமுறைப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்திய விவரங்கள் உள்ளடக்கிய அறிக்கை , புகைப்படம் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விரைந்து இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed @ nic . in ) அனுப்பி வைத்திடுமாறும் அதன் அசல் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


Post Top Ad