உலர் அத்தி பழத்தின் நன்மைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 31, 2020

உலர் அத்தி பழத்தின் நன்மைகள்

உலர் அத்தி பழத்தின் நன்மைகள்

அத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும். சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். ஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான். உலர் அத்திப்பழத்தின் பயனை தெரிந்து கொண்டால் இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும். இதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். பலன்களும் அதிகமாக தரும். நாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடையில் இது கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தின் பயனை பற்றி பார்ப்போமா.




அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது. தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஏற்படும் பயன்கள்.
இதயத்திற்கு
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். இதயம் ஆரோக்கியமாகும். இதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.




புற்றுநோயை தடுக்கும்
புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்லகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எலும்புகள் வலுவாக
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.

Post Top Ad