ஜனவரி 15 -ம் தேதி முதல் கல்வி முறையில் புதிய மாற்றம் ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

ஜனவரி 15 -ம் தேதி முதல் கல்வி முறையில் புதிய மாற்றம் ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!


வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, கடந்த நவம்பர் 16- ம் தேதி முதல் 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனிடையே, எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார்

மேலும், ஜனவரி 20 -க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர் உடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்களும் உரிய வசதிகளுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Post Top Ad