நடுநிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கும் உயர்நிலைமேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வுவழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர்ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்றஆண்டு தமிழக அரசு அரசாணை எண்101ன் படி தொடக்கக் கல்வித் துறையைபள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்துஆணை வெளியிட்டதுஅதனடிப்படையில் மாவட்ட கல்விஅலுவலர் நிர்வாகத்தின் கீழ் கல்விமாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரே நிர்வாகக்கட்டுப்பாட்டில் வந்தன ஆனால்ஆசிரியர்களுக்கு நன்மை தரக்கூடியபதவி உயர்வு தரக் கூடிய நிகழ்வுகள்மாற்றப்படவில்லை.
அண்மையில் *வட்டார கல்விஅலுவலர்கள்* நாங்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குநிகரான ஊதியம் பெறுகிறோம் ஆகவே*மாவட்டக் கல்வி அலுவலர்* பதவிஉயர்வு என்பது வழங்கப்பட வேண்டும்என்று கோரி நீதிமன்றத்தின் மூலம்அதற்கான உத்தரவைபெற்றுள்ளார்கள். அதேபோல்*நடுநிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்களும்* உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம்பெற்று வருகின்றனர். ஆனால் எந்தவிதபதவி உயர்வும் சுமார் 15 ஆண்டுகளாகவழங்கப்படவில்லை ஆகவே*நடுநிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கும்* உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு, வட்டார கல்வி அலுவலர்பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றுஎதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள்மாநிலம் முழுவதும் ஒன்றுகூடிஆலோசனை செய்து அரசுக்குகோரிக்கை வைக்க உள்ளனர்விரைவில் நல்லது நடைபெறும் என்றுஎதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக*கல்வித்துறை செயலாளர்* *இயக்குனர்கள்* விரைவில் முடிவுஎடுத்து 1.1.2021 முதல்*நடுநிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கும்* *உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு* *மேல்நிலைப்பள்ளி முதுகலைஆசிரியர் பதவி உயர்வு வட்டார கல்விஅலுவலர் பதவி உயர்வு வழங்கும்படிஒருங்கிணைந்த முன்னுரிமைபட்டியலில் வெளியிடுவதற்கு உரியஅரசாணைகள் பிறப்பிப்பார்கள் என்றுநம்புகிறோம்.