கொரானாவுக்கு பலியான தலைமையாசிரியர்.., - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 10, 2020

கொரானாவுக்கு பலியான தலைமையாசிரியர்..,


 

புதுச்சேரி அரசு கல்வித்துறை ஒரு இளம் தலைமயாசிரியரை இழந்துவிட்டது,இழந்துவிட்டதா அல்லது காவுக்கு காரணமாகிவிட்டதா ? என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.அவருக்கு கொரானா வந்ததற்கான காரணம் இதுதான் எனத் தெரியாவிட்டாலும் அவர் கடந்த வாரம் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மக்களின் நேரில் தொடர்புள்ள ரேஷன் அரிசி வழங்கும் பணியில் இருந்தார் என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரேஷன் அரிசி வாங்க வந்த மக்களிடமிருந்து இவருக்கு பரவியதா ? அல்லது இவரிடமிருந்து மக்களுக்கு கொரானாப் பரவல் இருந்துள்ளதா ? என்பதனையும் யோசிக்க வைத்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தினை பின்பற்றும் புதுச்சேரி அரசு ,9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறது.ஏற்கனவே அன்னைத் தெரசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டபோதும் சரி,திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேலாயுதம் பாதிக்கப்பட்ட போதும் சரி,பள்ளி/வகுப்பு வளாகங்கள் Sanitize பண்ணாமலேயே அப்படியே வகுப்புகள் நடந்து வருவதும் கவலையளிக்கிறது.
இதுவே SBI,LVB வங்கி ஊழியர்கள்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டபோது வங்கி 2 நாட்களுக்கு மூடப்பட்டு sanitize செய்யப்பட்டதையும் இப்போது நினைவு கூறுகிறேன்.
கல்வித்துறை கொரானாப் பரவலை அலட்சியமாகவே கையாள்கிறதோ என் கிற ஐயம் எழுகிறது.கொரானாவின் பலி தலைமையாசிரியர் திரு.சிவக்குமார் அவர்களோடு நின்று விடுமா ?
அல்லது தொடருமா ?
என்பது கல்வித்துறை கையிலும் உள்ளது.

Post Top Ad