பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 10, 2020

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்.


 


நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும், 5.45 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 215 கோடி ரூபாய் செலவில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார்.


தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்க, மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் அனைவருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், 2001 - 2002ம் கல்வியாண்டில், ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது.கடந்த, 2005 - 06ம் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், அனைத்து பிரிவு மாணவ - மாணவியருக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 


நடப்பு கல்வியாண்டில், 2.38 லட்சம் மாணவர்கள், 3.07 லட்சம் மாணவியர் என, மொத்தம், 5.45 லட்சம் மாணவ -- மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தை, நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, ஒன்பது மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், ராஜலட்சுமி, வளர்மதி, தலைமை செயலர் சண்முகம் பங்கேற்றனர்.

Post Top Ad