நடப்பு கல்வியாண்டில் 2021’இல் நடக்க உள்ள சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் பிராக்டிகல் தேர்வுகள் இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கேள்விகளுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில், 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேர்வுகளை நடத்த முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
மார்ச் மாத தேதிகளைப் பொறுத்தவரை, நிலைமை மதிப்பீடு செய்யப்படுவதாகவும், தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
Post Top Ad
Tuesday, December 22, 2020
Home
Unlabelled
பிப்ரவரி வரை பொதுத்தேர்வு கிடையாது; ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமே இல்லை: மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி: