சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு



சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க, சனிப்பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியில் இருந்து, அடுத்த 48 நாட்களுக்கு கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad