தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்

தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்


தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம்.


தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.


மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.

நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.

சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.





சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.

குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive