முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 10, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவள்ளுவர் ஆண்டு 2051 , விகாரி வருடம் தை மாதம் ந . க . எண் . 1386 / « 1 / 2020 நாள் . 09 . 02 . 2020

பொருள் : பள்ளிக் கல்வி - கடலூர் மாவட்டம் - முதுகலை ஆசிரியர் பணியிடம் - கலந்தாய்வு மூலம் ஆணை வழங்குதல் - தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்பு .

பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 0352 / டபிள்யு 3 / 2019 நாள் . 05 . 02 . 2020 * * * * * * பார்வையில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகளுக்கிணங்க ,

அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு EMIS இணையதளம் மூலம் 09 . 02 . 2020 மற்றும் 10 . 02 . 2020 ஆகிய இரு நாட்களில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெற்றுள்ளது .

பணி நியமனம் பெற்ற ஆசிரியர் பணியில் சேர வருகை புரியும்போது சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியரின் பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள 1 முதல் 14 வரையிலான நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றப்பட்ட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகள் பெற்ற ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின்படி 12 . 02 . 2020 அன்று பணியில் சேர வேண்டும் .

எக்காரணத்தை முன்னிட்டும்
12 . 02 . 2020க்கு முன்னர் பணியில் சேர அனுமதித்தல் கூடாது என அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

ஓம் / - கா . ரோஸ் நிர்மலா முதன்மைக் கல்வி அலுவலர் கடலூர்.

Post Top Ad